உலக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்துள்ள அயர்லாந்து அணி 96 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நாசோ கவுன்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து அயர்லாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஆண்ட்ரு பால்பிரினி மற்றும் கேப்டன் பவுல் ஸ்டிரிலிங் களம் இறங்கினர். ஆண்ட்ரு 5 ரன்னிலும், பவுல் 2 ரன்னிலும் வெளியேற 3 ஆவது களம் இறங்கிய விக்கெட் கீப்பர் லோர்கன் டக்கர் 10 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஹேரி டெக்டர் 4 ரன்னம் கர்டிஸ் கேம்பர் 12 ரன்களும் எடுத்தனர். சீரான இடைவெளியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால், அயர்லாந்து அணியால் ரன் குவிக்க முடியவில்லை.
இதையும் படிங்க – T20 World Cup : இந்தியா – அயர்லாந்து போட்டி எப்போது? எங்கு பார்க்கலாம்?
16 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த அயர்லாந்து அணி 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக காரெத் டிலானி 14 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங், பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
