Last Updated:
ஏற்கனவே நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பும்ரா பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் பரவியுள்ளன.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளருக்கு பயிற்சியின்போது காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படுமா என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. இதில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டர் நகரில் வரும் 23ஆம் தேதி தொடங்க உள்ளது.
இதனையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். நான்காவது டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுவிட்டால் தொடரைக் கைப்பற்றி விடும். இதனால் இந்த போட்டி இந்திய அணிக்கு முக்கியமான ஒன்றாக அமையும். இதே போன்று போட்டி டிராவில் முடிந்தாலும் இந்தியாவால் இந்த தொடரை வெல்ல முடியாது. அதிகபட்சம் தொடரை மட்டுமே செய்ய முடியும்.
இத்தகைய சூழலில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் சிங்கர்க்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பும்ரா பங்கேற்க மாட்டார் என்று தகவல்கள் பரவிய நிலையில் அவருக்கு மாற்று வீரராக ஹர்ஷிதீப் சிங் களமிறங்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.
July 17, 2025 9:22 PM IST


