Last Updated:
நடப்பாண்டு திருவிழாவில் அமெரிக்க அதிபர் டிரம்பின் ராட்சத உருவ பொம்மை ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தது.
இந்தியப் பொருட்களுக்கு 50 விழுக்காடு இறக்குமதி வரி விதித்ததைக் கண்டிக்கும் விதமாக மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த பாரம்பரியத் திருவிழாவில் அமெரிக்க அதிபர் டிரம்பின் ராட்சத உருவபொம்மையை மக்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர்.
நாக்பூரில் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக ’போலா’ திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக விதவிதமான பொம்மைகளை ஊருவலமாக எடுத்துச் செல்லப்பட்டு எரிப்பது வழக்கமாக உள்ளது. இவை தீய சக்திகளை விரட்டும் என்று மக்களால் நம்பப்படுகிறது.
இந்நிலையில், நடப்பாண்டு திருவிழாவில் அமெரிக்க அதிபர் டிரம்பின் ராட்சத உருவ பொம்மை ஊர்வலத்தில் இடம்பெற்றிருந்தது. இந்தியப் பொருட்களுக்கு 50 விழுக்காடு இறக்குமதி வரி விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக டிரம்பின் உருவபொம்மையை எடுத்துச் சென்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது. அஞ்சல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்காவின் புதிய விதிமுறைகளின் காரணமாக ஆகஸ்ட் 25க்குப் பிறகு சரக்குகளை ஏற்க முடியாது என்று அமெரிக்காவுக்குச் செல்லும் விமான நிறுவனங்கள் தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
#WATCH | Nagpur, Maharashtra | A giant effigy of US President Donald Trump became the highlight of the centuries-old Marbat festival as people symbolically expressed their protest over US sanctioning 50% tariff on India. pic.twitter.com/KoXNaPj846
— ANI (@ANI) August 23, 2025
எனவே, கடிதங்கள், ஆவணங்கள் மற்றும் 100 அமெரிக்க டாலர் வரை மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் தவிர, ஆகஸ்ட் 25 முதல் அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து வகையான அஞ்சல் பொருட்களின் முன்பதிவையும் தற்காலிகமாக நிறுத்திவைக்க உள்ளதாக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.
Nagpur,Maharashtra
August 24, 2025 8:56 AM IST
இந்தியா மீது அமெரிக்கா 50% வரி விதிப்பு.. டிரம்ப் உருவபொம்மையை வைத்து வித்தியாசமாக எதிர்ப்பு தெரிவித்த மக்கள்!


