Last Updated:
இந்தியா நியூஸிலாந்து 3வது டி20 போட்டி கவுகாத்தியில் இன்று நடக்கிறது.
இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று இரவு நடைபெறுகிறது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூஸிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனைத்தொடர்ந்து இவ்விரு அணிகளும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. முதல் இரண்டு ஆட்டத்திலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று தொடரை 2-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் நியூஸிலாந்து தோல்வி அடைந்தால் தொடரை இந்திய அணி கைப்பற்றி, ஒருநாள் தொடரில் கண்ட தோல்விக்கு பழிதீர்க்கும்.
இதனால் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இன்றைய ஆட்டம் முக்கியமானது என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தும் இந்திய அணி பந்துவீச்சிலும் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இன்றைய ஆட்டத்தில் பும்ரா விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, போட்டியில் விளையாடுவதற்காக அசாம் வந்த இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


