Last Updated:
இந்தியா-நியூசிலாந்து இடையே 57% பொருட்கள் மீதான வரி நீக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. பிரதமர் மோடி முன்னிலையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.
நியூசிலாந்தில் இருந்து இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் 57 சதவிகிதப் பொருட்கள் மீதான வரிகள் நீக்கப்படுவதற்கான ஒப்பந்தம் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் கையெழுத்தானது.
கடந்த 6-ஆம் தேதி அரசு முறைப்பயணமாக இந்தோனேசியா சென்ற பிரதமர் மோடி, அங்கிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சென்றார். ஆஸ்திரேலியா பயணத்தை முடித்துக் கொண்டு நியூசிலாந்து சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் விமான நிலையம் சென்று வரவேற்றார். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் ராணுவ மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர், ஆக்லாந்தில் உள்ள அரசு மாளிகைக்கு சென்ற பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி மற்றும் நியூசிலாந்து பிரதமர் முன்னிலையில் இருதரப்பு உயர் மட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இருநாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளின் கீழ் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
This has been a great year for the India-New Zealand partnership. Earlier this year, our nations concluded a Free Trade Agreement in record time and now, we have elevated our ties to a Strategic Partnership. Next up, we wish to double bilateral trade by 2030! https://t.co/IyR5qpUt2X
— Narendra Modi (@narendramodi) July 11, 2026
குறிப்பாக, தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை உறுதி செய்வது, கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அப்போது, இந்தியா-நியூசிலாந்து இடையிலான உறவு இயற்கையானது என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.
Jul 11, 2026 12:03 PM IST


