ஆகஸ்ட் இறுதியில் சீனாவில் நடைபெறவுள்ள ஹாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டுக்குள் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம், இந்த மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் சீ ஜின்பிங் சந்தித்துக்கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.
இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவு அபாயத்தைச் சந்தித்திருக்கும் சூழலில் சீனாவுடனான அரசியல் உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மீது 25% வரி விதித்த ட்ரம்ப், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதால் கூடுதலாக 25% அபராதமும் விதித்திருக்கிறார்.
சீனாவின் மீது விதித்த 145% வரிவிதிப்பை கடந்த மே மாதம் 90 நாள்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைத்த ட்ரம்ப், ஆகஸ்ட் 11ம் தேதி இன்னும் 90 நாள்களில் சீனா உடனான பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, வரி விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிடமிருந்து அதிகம் எண்ணெய் வாங்கும் சீனாவுக்கு ட்ரம்ப்பால் கராறாக வரி விதிக்க முடியவில்லை என்பது சர்வதேச அரசியல் வட்டத்தில் பேச்சுபொருளாகியிருக்கிறது.

