அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தொலைபேசி வழியாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்க்கு வாழ்த்து தெரிவித்தார். அப்போதே, பிரதமர் மோடி, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் அதிபர் ட்ரம்ப் உரையாடியபோது, இந்தியர்களின் சட்டவிரோத குடியேற்றம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளனர். மேலும், பிரதமர் மோடியுடன் குடியேற்றம் குறித்து விவாதித்ததாகவும், சட்டவிரோத குடியேறிகளை திரும்ப அழைத்துச் செல்வதில் இந்தியா சரியான முடிவெடுக்கும் என்றும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்த நிலையில்தான், அமெரிக்காவிலிருந்து சட்டவிரோத குடியேறிகளுடன் விமானம் புறப்பட்டிருக்கிறது.

