இன்று 7ஆம் கட்ட மக்களவை தேர்தல் நடைபெற்ற நிலையில், டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் இந்தியா கூட்டணி கட்சியினர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களும், அகிலேஷ் யாதவ், சரத் பவார், அரவிந்த் கெஜ்ரிவால், பிரகாஷ் கரத், டி.ராஜா, டி.ஆர்.பாலு, தேஜஸ்வி யாதவ், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக்கு பிறகு பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, இந்தியா கூட்டணி 295 தொகுதிகளில் வெல்லும் என்றும், இந்தியா கூட்டணியில் உள்ள தலைவர்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்றும் எங்களை பிரிக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக கூட்டணி 40 இடங்களை பெறும் எனவும், பாஜக படுதோல்வி அடையும் என்றும் தெரிவித்தார்.
மக்களவை தேர்தலின் பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று மாலை 6:30 மணிக்கு நியூஸ்18 தமிழ்நாடுவில் வெளியாகும் நிலையில், தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகிறது.
.
&w=750&resize=750,375&ssl=1)
