Last Updated:
ராகுலை பிரதமராக்க மு.க. ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்றும், இந்தியா கூட்டணியை தலைமை தாங்க முதலமைச்சர் ஸ்டாலினே சிறந்த நபர் என்றும் மணிசங்கர் ஐயர் தெரிவித்தார்.
இந்தியா கூட்டணிக்குத் தலைமை தாங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்தான் சரியான நபர் என முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் ஐயர், திருவனந்தபுரத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்றார். அப்போது, காங்கிரஸ் விட்ட பணியை மீண்டும் முதல்வராகவுள்ள பினராயி விஜயன் தொடரவேண்டும் எனத் தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், ராகுலை பிரதமராக்க மு.க. ஸ்டாலினால் மட்டுமே முடியும் என்றும், இந்தியா கூட்டணியை தலைமை தாங்க முதலமைச்சர் ஸ்டாலினே சிறந்த நபர் என்றும் தெரிவித்தார்.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது; “இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க சிறந்த மனிதர் மு.க. ஸ்டாலின்தான் என நான் நினைக்கிறேன். ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு இந்தியாவின் பிரதமராக காமராஜரிடம் கேட்டபோது, “ஆங்கிலமும் தெரியாது, இந்தியும் தெரியாது. பிறகு எப்படி?” என அவர் தெரிவித்தார். எனவே மு.க. ஸ்டாலினும் அதே நிலையில்தான் இருக்கிறார்.
#WATCH | Thiruvananthapuram, Kerala: Mani Shankar Aiyar says, “…If the INDIA bloc is consolidated, I think the best man to consolidate it is MK Stalin. When Kamaraj was asked to become the PM of India in succession to Jawaharlal Nehru, he had one sentence to say – “No English,… pic.twitter.com/b3lopII9Gx
— ANI (@ANI) February 16, 2026
கடந்த ஒரு வருடமாக ஸ்டாலின், இந்தியாவின் கூட்டாட்சிக்கு பொருத்தமான ஒவ்வொரு விஷயத்தையும் எழுப்பி வருகிறார். எனவே இந்தியா கூட்டணிக்கு தலைமை தாங்க மு.க. ஸ்டாலின் சிறந்த நபர் என நான் நம்புகிறேன். அதேபோல், ராகுல் காந்தி பிரதமராவதற்கும் அவர் தடையாக இருக்கமாட்டார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.


