Last Updated:
INDIA Alliance | பாஜகவுடன் தொடர்பு குற்றச்சாட்டு குறித்து தெளிவுபடுத்தாவிட்டால் இந்தியா கூட்டணியின் நோக்கமே கேள்விக்குறியாகும் என எம்.ஏ.பேபி, சுட்டிக்காட்டியுள்ளார்.
பாஜகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் முன்வைத்த குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்குமாறு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு எம்.ஏ.பேபி கடிதம் அனுப்பியுள்ளார்.
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரையின்போது ஆட்சியில் இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மூத்த தலைவர் ராகுல் காந்தி போன்ற தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக, பாஜகவுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மறைமுக ஒப்பந்தம் செய்திருப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தனர்.
இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி, குற்றச்சாட்டு குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
இந்த விஷயங்களை தெளிவுபடுத்தாவிட்டால் இந்தியா கூட்டணியின் நோக்கமே கேள்விக்குறியாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
டெல்லியில் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறும் நிலையில், எம்.ஏ.பேபியின் இந்த கடிதம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.


