Last Updated:
ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்படவில்லை; இது எதிரிகளுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது – ஈரான்
ஹார்முஸ் ஜல சந்தி வழியே கப்பல்கள் செல்வதற்கு இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெற்று வரும் மோதல் கடந்த சில வாரங்களாக கடுமையாக அதிகரித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் சண்டையிட்டு வருகிறது. இந்த மோதல் காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமின்றி உலக நாடுகளிலும் எரிபொருள் பிரச்னை ஏற்பட்டிருக்கிறது.
மத்திய கிழக்கு போரின் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் உரங்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து, ஈரான் இந்தியா உள்பட 5 நாடுகளுக்கு ஹார்முஸ் நீரினை வழியே கப்பல்களை கொண்டு செல்லலாம் என்கிற தளர்வை அறிவித்துள்ளது. இதன்படி இந்தியா, சீனா, பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் ஈராக் நாடுகளுக்கான கப்பல்கள் ஹார்முஸ் நீரினை வழியே செல்லும்.
மேலும், ஹார்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்படவில்லை; இது எதிரிகளுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளது என்று ஈரான் தெளிவுபடுத்தியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் போரில் அவர்களுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகளின் கப்பல்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.
அனுமதி பெற்ற நாடுகளின் கப்பல்கள் ஈரான் மீதான எந்தவொரு தாக்குதலுக்கும் உதவக்கூடாது மற்றும் ஈரானின் பாதுகாப்பு விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது.
இந்தியா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு மட்டும் அனுமதி.. ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் அதிரடி தளர்வு!

