இறுதிப்போட்டி ஒரு கட்டத்தில் தென்னாப்பிரிக்காவிற்கு சாதகமாக அமைந்த போது ஹர்திக் பாண்டியா இந்தியாவுக்கு தேவையான முக்கிய விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார். தென் ஆப்பிரிக்கா அணியின் முக்கிய வீரராக கருதப்படும் க்ளாசனை வீழ்த்தியதும் நம்பிக்கை பிறந்தது. மேலும் சூரியகுமார் யாதவின் முக்கிய கேட்ச் வெற்றிக்கு திருப்புமுனையாக அமைந்தது. ஹர்திக் பாண்டியா மூன்று முக்கிய விக்கெட்டுகளை எடுத்து கொடுத்தார்.பும்ராவின் 16வது மற்றும் 18வது ஓவர்கள் முக்கியமானவை. 16வது ஓவரில் பும்ரா 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். அதேபோல் பும்ராவும் 18வது ஓவரில் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து விக்கெட்டை கைப்பற்றினார். அவரது 2 ஓவர்கள் மிக மிக முக்கியமானவை என்பதில் எந்த சந்தேகமில்லை.
37 வயதான ரோஹித் சர்மா, கபில்தேவ் (1983), எம்எஸ் தோனி (2007 மற்றும் 2011) ஆகியோருக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்ற மூன்றாவது இந்திய கேப்டன் என்ற பெருமையை சேர்த்துள்ளார்.

