இந்த விவகாரம் குறித்து வியாழக்கிழமை செய்தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை செய்தித் தொடர்புத் துறையின் செயலர் கரீன் ஜீன்-பியர் பேசியதாவது:
“அதானி மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் அறிவோம். அதானி குழுமத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் அம்சங்கள் குறித்து பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் மற்றும் நீதித்துறையினர் தெரிவிப்பர்.
நான் என்ன சொல்ல விரும்புகிறேன் என்றால், இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான உறவு வலுவான அடித்தளம் கொண்டது. இரு நாட்டு மக்களையும் நல்ல உறவில் உள்ளனர். உலகளாவிய பிரச்னைகளில் முழு ஒத்துழைப்பு கொடுக்கப்பட்டு வருகின்றது.
எனவே, இந்த விவகாரத்தை தொடர்ந்து வழிநடத்திச் செல்ல உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்த விவகாரத்தை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் மற்றும் நீதித்துறை நேரடியாக கவனிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

&w=1200&resize=1200,675&ssl=1)