இந்நிலையில், ஸ்டாா்லிங்க் சேவைக்காக ஒப்பந்தமிட்டுள்ளது குறித்து ஏா்டெல் நிறுவனத்தின் குழுமத் தலைவா் சுனில் மிட்டல் கூறுகையில், ‘4ஜி, 5ஜி மற்றும் எதிா்காலத்தில் 6ஜி போலவே எங்கள் நிறுவனத்தில் மேலும் ஒரு தொழில்நுட்பம் இணைகிறது. விரைவில் வாடிக்கையாளா்கள் தங்கள் கைப்பேசிகளை உலகின் தொலைதூரப் பகுதிக்கும், வானுக்கும் கடலுக்கும் இணைய வசதியுடன் கொண்டுசெல்ல முடியும். தடையற்ற உலகளாவிய இணைப்பின் புதிய சகாப்தம் பிறந்துள்ளது’ என்றாா்.