நாட்டில், பெண்களின் வளர்ச்சி, கல்வி, பாதுகாப்பு மற்றும் அதிகாரமளிப்பை ஆதரிப்பதற்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளன. இந்தத் திட்டங்கள் பெண்களின் கல்வி, சுகாதாரம், நிதி உதவி, திறன் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை அணுகுவதன் மூலம் சிறந்த வாழ்க்கையை வாழ உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சில திட்டங்கள் பெண் குழந்தைகளைக் காப்பாற்றுதல் மற்றும் கல்வி கற்பதில் கவனம் செலுத்துகின்றன. மேலும், பெண்கள் சொந்தத் தொழில் தொடங்குதல் உள்ளிட்டவற்றுக்கு உதவுகின்றன.


