வட இந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில் 7 பயணிகளுடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் யாத்ரீகர்கள் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவர்களில் ஐந்து பெரியவர்களும் ஒரு குழந்தையும் அடங்குவர் என்றும் சொல்லப்பட்டுள்ளது.
மதுபோதையில் வாகனத்தை மரத்தில் மோதிய ஆடவர் கைது (Video)
அதிகாரிகள் சிக்னலை இழந்ததால் அதிகாலை 5 மணியளவில் ஹெலிகாப்டர் காணாமல் போனதாக கூறப்படுகிறது.
மக்கள் வசிக்கும் இடத்திலிருந்து மிகவும் தொலைதூரப் பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது.
தற்போது மீட்பு நடவடிக்கைகளில் மீட்புக் குழுக்கள் ஈடுபட்டுள்ளதாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.
இருப்பினும், விபத்தில் 10 வயதுமிக்க சிறுவன் ஒருவர் உட்பட 7 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தகவல் கூறுகின்றன.
அம்மாநிலத்தில் கடந்த 40 நாட்களில் மட்டும் 5 வது முறையாக ஹெலிகாப்டர் விபத்து நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அஹமதாபாத்தில் ஏர் இந்திய விமான கோர விபத்து நடந்த 3 நாட்களுக்கும் இந்த விபத்து நடந்திருப்பது விமான பயணிகளிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகு*ண்டு மிரட்டல் – அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்

