• Login
Sunday, July 6, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

இந்தியாவில் பணியாற்றும் சீன ஊழியர்களை வீடு திரும்புமாறு உத்தரவு! 

GenevaTimes by GenevaTimes
July 5, 2025
in உலகம்
Reading Time: 1 min read
0
இந்தியாவில் பணியாற்றும் சீன ஊழியர்களை வீடு திரும்புமாறு உத்தரவு! 
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற குறிக்கோள் காரணமாக அமெரிக்கா மற்றும் சீனாவின் அழுத்தத்தை ஆப்பிள் நிறுவனம் எதிர்கொள்ளும் நேரத்தில் இந்த நடவடிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபோன் தயாரிப்பாளர் இந்தியாவில் அதன் உற்பத்தி கூட்டாளர்களுடன் இணைந்து புதிய ஐபோன் 17-ன் உற்பத்தியை அதிகரிக்கத் தயாராகி வருவதாகவும், தென்னிந்தியாவில் ஒரு புதிய ஐபோன் ஆலையைக் கட்டும் பணியில் ஃபாக்ஸ்கான் ஈடுபட்டுள்ளதாகவும் ப்ளூம்பெர்க் அறிக்கை கூறுகிறது.

தென்னிந்தியாவில் உள்ள ஐபோன் ஆலைகளில் பணியாற்றும் ஃபாக்ஸ்கானின் பெரும்பாலான சீன ஊழியர்கள் ஊருக்குச் செல்லுமாறு கூறப்பட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் அறிக்கை தெரிவித்தாலும், இந்த நடவடிக்கை சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே  300 சீன தொழிலாளர்கள் வெளியேறிவிட்டதாகவும், பெரும்பாலும் தைவானிய ஊழியர்கள் தான் இந்தியாவில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

2025-ம் ஆண்டின் தொடக்கத்தில் சீன அரசாங்கம், ஒழுங்குமுறை நிறுவனங்கள் மற்றும் உள்ளூர் அரசாங்கங்களை இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான தொழில்நுட்ப பரிமாற்றங்கள் மற்றும் உபகரண ஏற்றுமதிகளைக் கட்டுப்படுத்துமாறு கூறியிருந்தது. பல்வேறு நிறுவனங்கள் உற்பத்தியை வேறு இடங்களுக்கு மாற்றுவதைக் கண்டு அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ள சீனா, அதைத் தடுக்க முயற்சிக்கிறது.

இந்தியா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் உலகளாவிய தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளில் கவர்ச்சிகரமான மாற்றுகளாக இருப்பதால், அரிய கணிம வளங்கள் ஏற்றுமதி முதல் உற்பத்தித் திறன் கொண்ட திறமையாளர்களை வெளியே அனுப்புவது வரை தனது பிடியை இறுக்கி வருகிறது சீனா.

நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் பெருமளவில் ஐபோன்களை உற்பத்தி செய்யத் தொடங்கிய இந்தியா, இப்போது ஆப்பிளின் உலகளாவிய உற்பத்தியில் சுமார் 20 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இந்த வளர்ச்சியில் பெரும்பகுதி, இந்திய பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்க ஃபாக்ஸ்கானால் நியமிக்கப்பட்ட சீன மேலாளர்களையே நம்பியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக் காலத்தில், ஆப்பிள் நிறுவனம் சில கேஜெட் அசெம்பிளிகளை இந்தியா மற்றும் வியட்நாமுக்கு மாற்றத் தொடங்கியபோது, ​​அமெரிக்க-சீன விநியோகச் சங்கிலி துண்டிப்பு தொடங்கியது. டிரம்பின் புதிய வரிவிதிப்பு இதை துரிதப்படுத்த, சீனாவோ அரிய தாதுக்கள், திறமையான தொழிலாளர்கள் மற்றும் உயர்நிலை உற்பத்தி உபகரணங்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்துவதன் மூலம் பதிலடி கொடுத்தது.

அமெரிக்க நுகர்வோருக்கான ஐபோன்கள் அமெரிக்காவிலேயே தயாரிக்கப்பட வேண்டும் என்று வாதிடும் டிரம்ப், ஆப்பிளின் இந்தியத் திட்டங்களையும் குறிவைத்துள்ளார். ஆனால் அமெரிக்காவில் தொழிலாளர் செலவுகள் அதிகமாக இருப்பதாலும், சீனா தனது பொறியாளர்கள் வெளிநாடுகளில் செயல்பாடுகளை அமைக்க உதவ அனுமதிக்க விரும்பாததாலும், அமெரிக்காவில் ஐபோன்களை அசெம்பிள் செய்வது சாத்தியமில்லை.

ஃபாக்ஸ்கான் சீனாவில் பெரும்பாலான ஐபோன்களைத் தொடர்ந்து தயாரித்து வந்தாலும், அதன் இந்திய விரிவாக்கம் ஆப்பிளின் உலகளாவிய உற்பத்தித் துறையில் முக்கிய மாற்றங்களில் ஒன்றாகும்.

புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

July 05, 2025 12:26 PM IST

Read More

Previous Post

ஓலா, ஊபர் கட்டண உயர்வு அனுமதியை மத்திய அரசு திரும்ப பெற கோரிக்கை | trade federation urge state to withdraw Ola Uber fare hike permission

Next Post

கெடா காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கொல்லப்பட்டனர் – Malaysiakini

Next Post
கெடா காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கொல்லப்பட்டனர் – Malaysiakini

கெடா காவல்துறையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கொல்லப்பட்டனர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin