Last Updated:
டிரம்ப், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களுக்கு 25% கூடுதல் கட்டணம் விதிக்க திட்டம். அமெரிக்காவில் உற்பத்தி செய்தால் கட்டணம் இல்லை. ஹார்வர்டு தடை உத்தரவு ரத்து.
இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன்களை அமெரிக்காவில் விற்றால் அதற்கு 25 விழுக்காடு கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக அறிவித்துள்ளார் .
அமெரிக்காவில் செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், இந்தியாவில் ஐபோன்களை உற்பத்தி செய்யும் திட்டத்தை அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் கைவிட வேண்டும் என்றார். அமெரிக்காவுக்குள் ஐபோன்களை உற்பத்தி செய்து விற்பனை செய்தால் எந்த கட்டணமும் செலுத்த தேவையில்லை என்றும் , அமெரிக்காவை விட்டு வெளியே தயாரிக்கப்படும் செல்போன்களுக்கு வரி அதிகம் இருக்கும் என்றும் எச்சரித்தார்.
இதனிடையே, அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் வெளிநாட்டு மாணவர்களை சேர்க்க டிரம்ப் நிர்வாகம் விதித்த தடை உத்தரவுக்கு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஹாலிஸன் தடை பிறப்பித்துள்ளார்.
ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் உற்பத்தியின் பெரும்பகுதியை இந்தியாவிலிருந்தே தயாரிக்கிறது. 2024ஆம் ஆண்டு, இந்தியாவின் iPhone ஏற்றுமதி சுமார் ₹1.1 லட்சம் கோடியைத் தொட்டது. இது முந்தைய ஆண்டைவிட 42% அதிகம் என்கிற விஷயம் இதில் கவனிக்கத்தக்க ஒன்று. Foxconn, Pegatron, Tata Electronics போன்ற நிறுவனங்களின் மூலமாக, இந்தியாவில் ஐபோன்கள் உற்பத்தியாகும் நிலையில் இவற்றுள் 70 முதல் 80% உற்பத்தி தமிழ்நாடு வசமே உள்ளது என்பது குறிப்பிடதக்கது.


