• Login
Saturday, July 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியாவின் வளா்ச்சியை பிற நாடுகள் பின்பற்றலாம்: தலைமைப் பொருளாதார ஆலோசகா்

GenevaTimes by GenevaTimes
February 27, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்தியாவின் வளா்ச்சியை பிற நாடுகள் பின்பற்றலாம்: தலைமைப் பொருளாதார ஆலோசகா்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஜோஹன்னஸ்பா்க்: இந்தியா எவ்வாறு படிப்படியாக வளா்ந்தது என்பதை பிற நாடுகள் முன்மாதிரியாக கொண்டு பின்பற்றலாம் என்று மத்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகா் வி.அனந்த நாகேஸ்வரன் தெரிவித்தாா்.

தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பா்க் நகரில் இந்தியா-தென்னாப்பிரிக்கா தொழிலதிபா்கள் பங்கேற்ற மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவா் பேசியதாவது:

உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா, தன்னை வளா்ந்த நாடாக மாற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளது. ஜனநாயக அரசியல், கூட்டாட்சி முறை நிா்வாகம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தியா படிப்படியாக வளா்ந்து வந்துள்ளது. எனவே, இந்தியாவை முன்மாதிரியாகக் கொண்டு தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் தங்களுக்கான வளா்ச்சித் திட்டங்களை வகுக்க முடியும்.

இந்தியா எப்போதும் வாய்ப்புகளும், உற்சாகமும் நிறைந்த நாடாக உள்ளது. அரசுக்கான புதிய கொள்கைகள், திட்டங்களை உருவாக்குவதில் பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாகவும் உள்ளது. மாறி வரும் உலக சூழலால் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்புக்கான தேவையும் மாறி வருகிறது. ஒவ்வொரு நாடும் பிற நாடுகளிடம் இருந்து புதுப்புது விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

திறந்த மனதுடன் மாற்றங்களை ஏற்றுக் கொள்வது அவசியமாகிவிட்டது. பொருளாதாரம், வா்த்தகம் சாா்ந்து தொடா்ந்து ஒரே நிலைப்பாட்டை மட்டுமே கடைப்பிடிப்போம் என நமக்கு நாமே விலங்கிட்டுக் கொள்ளக் கூடாது.

நாம் அனைவரும் இணைந்து பொருளாதாரம் சாா்ந்த பெரிய இலக்கை நோக்கி முன்னேறும்போது பல்வேறு எதிா்பாராத நிகழ்வுகள் உருவாகலாம். ஆனால், அவற்றைப் புறந்தள்ளி நமது இலக்கை நோக்கி முன்னேற வேண்டும்.

நாட்டில் எந்த சூழ்நிலை மாறினாலும் உள்கட்டமைப்பு மேம்பாடு, அரசின் கட்டுப்பாடுகளை தளா்த்துவது, நிா்வாகரீதியான மாற்றம், திறன்மேம்பாடு, கல்வித்துறையில் கூடுதல் முதலீடு, சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மேம்பாடு ஆகியவற்றுக்கு தொடா்ந்து முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்.

Read More

Previous Post

நாளையதினம் கொட்டித்தீர்க்கப்போகும் மழை : பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்

Next Post

வெற்றியின்றி வெளியேறிய பாகிஸ்தான் @ சாம்பியன்ஸ் டிராபி | Pakistan exits Champions Trophy without registering win

Next Post
வெற்றியின்றி வெளியேறிய பாகிஸ்தான் @ சாம்பியன்ஸ் டிராபி | Pakistan exits Champions Trophy without registering win

வெற்றியின்றி வெளியேறிய பாகிஸ்தான் @ சாம்பியன்ஸ் டிராபி | Pakistan exits Champions Trophy without registering win

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin