இந்தியா சீனாவை அதன் முதன்மை எதிரியாகக் கருதுகிறது. எனவே, இந்தியா போர்க்கள அணு ஆயுதங்களை உருவாக்குவது உட்பட அதன் இராணுவ நவீனமயமாக்கல் முயற்சியைத் தொடரும். அதே நேரம் பாகிஸ்தான் தனது அணு ஆயுதக் களஞ்சியத்தை நவீனமயமாக்கி வருகிறது. வெளிநாட்டு சப்ளையர்கள் மற்றும் இடைத்தரகர்களிடமிருந்து WMD-பொருந்தக்கூடிய பொருட்களை வாங்குகிறது. சீனாவின் பொருளாதார மற்றும் ராணுவ உதவிகளைப் பாகிஸ்தான் முதன்மையாகப் பெறுகிறது.

மேலும் பாகிஸ்தான் படைகள் சீனாவின் PLA உடன் ஒவ்வொரு ஆண்டும் பல ஒருங்கிணைந்த இராணுவப் பயிற்சிகளை நடத்துகின்றன. ஜேஎஃப்-17 மற்றும் ஜே-10சி மற்றும் பிஎல்-15 ஏவுகணை போன்ற சீனப் போர் விமானங்கள் இந்தியா – பாகிஸ்தான் மோதல்களின் போது பாகிஸ்தானால் பயன்படுத்தப்பட்டன. பாகிஸ்தானின் பேரழிவு ஆயுதங்கள் (WMD), வெளிநாட்டுப் பொருட்கள், தொழில்நுட்பங்கள் முதன்மையாக சீனாவில் உள்ள சப்ளையர்களிடமிருந்து பெறப்பட்டிருக்கலாம். சில சமயங்களில் ஹாங்காங், சிங்கப்பூர், துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வழியாகவும் இந்தப் பொருள்கள் அனுப்பப்படுகின்றன.

