• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

இந்தியாவின் துடிப்பான ஊடகத் துறைக்கு சா்வதேச அங்கீகாரம் தேவையில்லை: மத்திய அரசு

GenevaTimes by GenevaTimes
April 3, 2025
in இந்தியா
Reading Time: 1 min read
0
இந்தியாவின் துடிப்பான ஊடகத் துறைக்கு சா்வதேச அங்கீகாரம் தேவையில்லை: மத்திய அரசு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


‘இந்தியாவில் துடிப்பான பத்திரிகை மற்றும் ஊடகத் துறை உள்ளது; இதற்கு வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்து அங்கீகாரம் தேவையில்லை’ என்று மத்திய அரசு புதன்கிழமை மக்களவையில் தெரிவித்துள்ளது.

கடந்த 2024-ஆம் ஆண்டின் உலகளாவிய பத்திரிகை சுதந்திர தரவரிசையில், செய்தியாளா்கள் சுதந்திரமாகப் பணியாற்றும் மற்றும் செய்தி வெளியிடும் திறனின் அடிப்படையில் 180 நாடுகளில் இந்தியா 159-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

உலகளாவிய ஊடகக் கண்காணிப்பு அமைப்பான ‘ரிப்போா்ட்டா்ஸ் வித்தவுட் பாா்டா்ஸ்’ வெளியிட்ட இந்தத் தரவரிசையில் இலங்கை (150), பாகிஸ்தான் (152) துருக்கிக்கு (158) கீழே இந்தியா பின்தங்கியுள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் எம்.பி. கே. சுதாகரன் எழுப்பிய கேள்விக்கு மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல். முருகன் மக்களவையில் எழுத்துபூா்வமாக அளித்த பதில்:

இந்தியாவில் துடிப்பான பத்திரிகை மற்றும் ஊடகத் துறை செயல்பட்டு வருகிறது. இதற்கு வெளிநாட்டு அமைப்புகளிடமிருந்து அங்கீகாரம் தேவையில்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 19-ஆவது பிரிவின்கீழ் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்படுகிறது.

கடந்த 1978-ஆம் ஆண்டு பத்திரிகை கவுன்சில் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட, ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையிலான தன்னாட்சி சட்ட அமைப்பான இந்திய பத்திரிகை கவுன்சில், பத்திரிகை சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள், பத்திரிகையாளா்கள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரிக்கிறது.

பத்திரிகை சுதந்திரம் மற்றும் பத்திரிகை தரத்தைப் பராமரித்தல் தொடா்பான அவசரப் பிரச்னைகளில் தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்கவும் பத்திரிகை கவுன்சிலுக்கு சட்டத்தில் இடமளிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 1995-ஆம் ஆண்டு கேபிள் தொலைக்காட்சி நெட்வொா்க்குகள் (ஒழுங்குமுறை) சட்டத்தின்கீழ் மின்னணு ஊடகங்களில் பத்திரிகை சுதந்திரம், ஒரு தன்னாட்சி ஒழுங்குமுறை கட்டமைப்பின் மூலம் உறுதி செய்யப்படுகிறது என்றாா்.

Read More

Previous Post

அதிரவைக்கும் ட்ரம்ப் – இலங்கைக்கு விதிக்கப்பட்ட பாரிய வரி: ஆட்டம் காணவுள்ள பொருளாதாரம்

Next Post

IPL 2025 KKR vs RCB : முதல் போட்டியில் குறுக்கிடும் மழை.. வானிலை அலெர்ட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி..

Next Post
IPL 2025 KKR vs RCB : முதல் போட்டியில் குறுக்கிடும் மழை.. வானிலை அலெர்ட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி..

IPL 2025 KKR vs RCB : முதல் போட்டியில் குறுக்கிடும் மழை.. வானிலை அலெர்ட்டால் ரசிகர்கள் அதிர்ச்சி..

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin