• Login
Thursday, March 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இந்தியப் பெருங்கடலுக்கும் பரவிய ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர்!

GenevaTimes by GenevaTimes
March 5, 2026
in இலங்கை
Reading Time: 2 mins read
0
இந்தியப் பெருங்கடலுக்கும் பரவிய ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியப் பெருங்கடலுக்கும் பரவிய ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர்

இலங்கைக்கு அருகில் நேற்று ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய போர்க்கப்பலை தாக்கியதில் குறைந்தது 87 பேர் கொல்லப்பட்டனர்.


மேலும் துருக்கி நோக்கிச் சென்ற ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணையை நேட்டோ வான் பாதுகாப்புப் படைகள் சுட்டு வீழ்த்தியது.


இது ஈரான் மீதான அமெரிக்க – இஸ்ரேல் போர் இந்தியப் பெருங்கடலுக்கும் பரவியுள்ளது.

Torpedo ஆயுதம்

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஒரு அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒரு எதிரி கப்பலுக்கு எதிராக Torpedo ஆயுதத்தை சுடப் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறை.


இந்த தாக்குதலிலும் தொடரும் தாக்குதலிலும் எந்தக் குறைவும் இருக்காது என்று அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தியப் பெருங்கடலுக்கும் பரவிய ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர்! | Us Israeli War Over Iran Spreads The Indian Ocean


அவை ஈரானின் பாலிஸ்டிக் ஏவுகணைத் திட்டத்தையும் அதன் கடற்படையையும் அழித்துவிட்டன என்றும் நேற்றைய சம்பவத்தை அமெரிக்க அதிகாரிகள் மேற்கோள்காட்டினர்.



போரின் ஐந்தாவது நாளான நேற்று, இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் ஈரான் மீது பலமுறை தாக்குதல்களை நடத்தியுள்ளன.



இதில் 1,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமைகள் குழுக்கள் கூறியுள்ளன.

அதே நேரத்தில் ஈரானும் இஸ்ரேல் மற்றும் வளைகுடா அரபு நாடுகள் மீது ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியது.


அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் கூறுகையில்,

அமெரிக்க-இஸ்ரேலிய கூட்டு இராணுவ நடவடிக்கை “எங்கள் தீவிர இஸ்லாமிய ஈரானிய எதிரிகளுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது” என்றார்.

“அவர்கள் பொறாமைப்படுகிறார்கள், அவர்களுக்கு அது தெரியும், இல்லையெனில் விரைவில் அவர்கள் அதை அறிந்து கொள்வார்கள்.

அமெரிக்காவும் இஸ்ரேலும் விரைவில் ஈரானிய வான்வெளியை முழுமையாகக் கட்டுப்படுத்தும்.

ஈரானிய இராணுவம்


நாங்கள் பகல், இரவு முழுவதும் பறந்து ஈரானிய இராணுவத்தையும் அவர்களின் தலைவர்களையும் கண்டுபிடித்து, சரிசெய்து, முடித்து வைப்போம்.

அது முடிந்துவிட்டது என்று அறிந்தவுடனே இந்த போர் முடிவடையும்.

இலங்கை கடற்கரையில் ஒபரேஷன் எபிக் ஃப்யூரிக்கு ஆதரவாக அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய போர்க்கப்பலான ஐ.ரி.ஸ் தேனாவை அமெரிக்கா மூழ்கடித்தது.

இந்தியப் பெருங்கடலுக்கும் பரவிய ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர்! | Us Israeli War Over Iran Spreads The Indian Ocean


மார்ச் 4 ஆம் திகதி இலங்கை கடற்கரையில் ஒபரேஷன் எபிக் ஃப்யூரிக்கு ஆதரவாக அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனாவை மூழ்கடித்தது.



ஜூன் மாதத்தில் நடந்த 12 நாள் போரின் போது இஸ்ரேல் மேற்கொண்ட நடவடிக்கையை விட இந்த போர் ஏழு மடங்கு தீவிரம் மிக்கது.


மேலும் கூடுதல் அமெரிக்க போர் விமானங்கள் இப்பகுதிக்கு வந்து கொண்டிருக்கின்றன” என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெத் தெரிவித்துள்ளார்.


இதன் போது இஸ்ரேலைப் பாராட்டிய அவர், போரில் அவர்களின் பங்கு “ஒப்பிடமுடியாத திறமையுடனும் இரும்பு உறுதியுடனும்” செயல்படுத்தப்படுவதாகவும், அத்தகைய திறமையான கூட்டாளியுடன் இணைந்து போராடுவது “புதிய காற்றின் சுவாசம்” என்றும் கூறினார்.


இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ்,

“இராணுவம் முன்னேறி கூடுதல் நிலைகளைக் கட்டுப்படுத்த அனுமதி அளித்ததாகக் கூறிய ஒரு நாள் கழித்து,

இஸ்ரேலிய துருப்புக்கள் தெற்கு லெபனானில் குறைந்தது ஒன்பது நகரங்களுக்குள் நுழைந்ததாக லெபனான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.


இந்நிலையில் லெபனானில் எந்தவொரு குறிப்பிட்ட புதிய நிலைநிறுத்தங்கள் குறித்தும் இஸ்ரேலிய இராணுவம் இதுவரை எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

ஈரான் மீது 5,000 குண்டுகள்


கடந்த சனிக்கிழமை முதல் ஈரான் மீது இஸ்ரேல் 5,000 குண்டுகளை வீசியுள்ளது.

இந்தியப் பெருங்கடலுக்கும் பரவிய ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர்! | Us Israeli War Over Iran Spreads The Indian Ocean

ஜூன் மாதம் இஸ்ரேலுடனான போருக்குப் பிறகு ஈரான் தனது அணுசக்தி திட்டத்தின் பெரும்பகுதியை மாற்றிய தெஹ்ரானின் புறநகரில் உள்ள ஒரு இரகசிய நிலத்தடி தளத்தை செவ்வாயன்று தனது ஜெட் விமானங்கள் அழித்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


புதன்கிழமை தெஹ்ரான் மீது இஸ்ரேலிய விமானப்படை F-35 ஈரானிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது, F-35 ஒரு மனிதர் கொண்ட போர் விமானத்தை வீழ்த்திய முதல் முறையாகும்.


அமெரிக்க கூட்டுப் படைத் தலைவர்களின் தலைவர் டான் கெய்ன் கூறிய கருத்துக்கள் அமெரிக்க படைகளின் தாக்குதல் நகர்வை மேலும் எடுத்துக்காட்டியுள்ளது.



“அமெரிக்க இராணுவப் பிரசாரம் உள்நாட்டில் விரிவடையத் தொடங்கி, படிப்படியாக ஈரானியப் பிரதேசத்திற்குள் தாக்கத் தொடங்குகிறது.

போரின் முதல் நாளிலிருந்து ஈரானின் பாலிஸ்டிக் திறன்கள் 86 சதவீதம் குறைந்துள்ளது.

அதன் ட்ரோன் ஏவுதல் 73 சதவீதம் குறைந்துள்ளது.

ஈரானின் முன்னாள் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் படுகொலையைத் தொடர்ந்து,

இரண்டாவது மகன் மொஜ்தபா காமெனி , பதவியேற்க முன்னணி வேட்பாளராக உருவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஈரான் இஸ்ரேலை தொடர்ந்து அச்சுறுத்தினால், காமெனியின் வாரிசு யாராக இருந்தாலும் அவர்கள் குறிவைக்கப்படலாம்” என விவரித்துள்ளார்.


இவ்வாறு இஸ்ரேலிய காட்ஸும் எச்சரித்திருந்தார்.

இஸ்ரேலிய தூதரகங்களை குறிவைப்போம்


இஸ்ரேலுக்கும் ஈரானிய ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லாவிற்கும் இடையே துப்பாக்கிச் சண்டைகள் தொடர்வதால், தெற்கு லெபனானில் வசிக்கும் சுமார் 300,000 பேர் அப்பகுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.

இந்தியப் பெருங்கடலுக்கும் பரவிய ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போர்! | Us Israeli War Over Iran Spreads The Indian Ocean



தெற்கு லெபனான் முழுவதும் அவசரமாக வெளியேறும் உத்தரவுகளை இஸ்ரேலிய இராணுவம் பிறப்பித்தது, குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை “உடனடியாக” வெளியேறி லிட்டானி ஆற்றின் வடக்கே செல்லுமாறு அழைப்பு விடுத்தது.



பெய்ரூட் அல்லது சிடோனில் இடம்பெயர்ந்த மக்களை தங்க வைக்க இனி இடமில்லை என்று லெபனானின் சமூக விவகார அமைச்சர் கூறியுள்ளார்.



லெபனான் முழுவதும் 250க்கும் மேற்பட்ட ஹிஸ்புல்லா இலக்குகளை ஏற்கனவே தாக்கியுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இதில் ரொக்கெட் லொஞ்சர்கள், கட்டளை மையங்கள், ஆயுதக் கிடங்குகள் மற்றும் மூத்த ஹிஸ்புல்லா தளபதிகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.



பெய்ரூட்டில் உள்ள ஈரானிய தூதரகத்தை யூத அரசு தாக்கினால், உலகெங்கிலும் உள்ள இஸ்ரேலிய தூதரகங்களை குறிவைப்போம் என்று ஈரான் கூறியதாக தெஹ்ரானின் ஆயுதப்படைகளின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.


மேலும், வளைகுடா நாடுகள் மீதான ஈரானிய தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன.

கட்டார் 10 ட்ரோன்கள் மற்றும் இரண்டு குரூஸ் ஏவுகணைகளை இடைமறித்தது, மேலும் ஒரு ட்ரோன் சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை நோக்கி செலுத்தப்பட்டது.



பிராந்தியப் போர் விரிவடைந்துள்ளதால், வளைகுடா நாடுகள் சமீபத்திய நாட்களில் மீண்டும் மீண்டும் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளன.

இதற்கிடையில்தான், இலங்கைக்கு அருகில் ஈரானிய போர்க்கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. 

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

மாதம்பட்டி ரங்கராஜுக்கு டி.என்.ஏ. பரிசோதனை | Makkal Osai

Next Post

Gold Rate | தங்க பிரியர்களுக்கு ஜாக்பாட்… தொடர் சரிவில் தங்கம் விலை… காரணத்தை விளக்கும் நிபுணர்கள்!

Next Post
Gold Rate | தங்க பிரியர்களுக்கு ஜாக்பாட்… தொடர் சரிவில் தங்கம் விலை… காரணத்தை விளக்கும் நிபுணர்கள்!

Gold Rate | தங்க பிரியர்களுக்கு ஜாக்பாட்... தொடர் சரிவில் தங்கம் விலை... காரணத்தை விளக்கும் நிபுணர்கள்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin