Last Updated:
Pahalgam Attack | பஹல்காம் தாக்குதலை கனடா செனடர் லியோ ஹூசகோஸ் கண்டித்து, இது மனித நேயத்தின் மீது காட்டுமிராண்டித் தாக்குதல் என குறிப்பிட்டார். அமெரிக்க செய்தி தொடர்பாளர் டாமி புரூஸும் இதை கண்டித்தார்.
பஹல்காம் தாக்குதல் சம்பவம் மனித நேயத்தின் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித் தனமான தாக்குதல் என்று கனடா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
கனடாவுடனான இந்தியாவின் உறவில் விரிசல் நிலவி வந்த நிலையில், பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்காக கண்டனம் தெரிவிக்காமல் அந்நாடு மவுனம் காத்து வந்தது விமர்சனத்திற்குள்ளானது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு கனடா செனடர் லியோ ஹூசகோஸ் (Leo Housakos) கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், இந்து சுற்றுலாப் பயணிகள் படுகொலை செய்யப்பட்டிருப்பது வெறும் தீவிரவாதம் மட்டுமல்ல என்றும் மனிநேயத்தின் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் என்றும் குறிப்பிட்டுளார். இந்த தாக்குதலின் பின்னணியில் உள்ளவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் உலக நாடுகள் அமைதியாக இருக்கக் கூடாது என்றும் லியோ ஹூசகோஸ் தெரிவித்துள்ளார்.
The massacre of Hindu tourists in India is not just terrorism—it’s a barbaric assault on faith and humanity. The perpetrators must face swift and uncompromising justice. The world must not stay silent. #PahalgamAttack #KashmirMassacre #JusticeForVictims
— Senator Leo Housakos (@SenatorHousakos) April 23, 2025
இதேபோன்று இந்தியாவிற்கு அமெரிக்கா துணை நிற்கும் அந்நாட்டு செய்தி தொடர்பாளர் டாமி புரூஸ் (Tammy Bruce) தெரிவித்துள்ளார். பஹல்காமில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
April 25, 2025 8:05 AM IST
Pahalgam Attack | “இது மனித நேயத்தின் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டி தாக்குதல்” – பஹல்காம் தாக்குதலுக்கு கனடா கடும் கண்டனம்


