Cricket
oi-Yogeshwaran Moorthi
கொழும்பு: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்சர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரிஷப் பண்ட் படைத்துள்ளார். இதன் மூலமாக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஆடம் கில்கிறிஸ்ட் சாதனையையும் முறியடித்து 3வது இடத்திற்கு ரிஷப் பண்ட் முன்னேறியுள்ளார்.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 462 ரன்கள் எடுத்த நிலையில், இலங்கை அணி 284 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. இதன்பின் இந்திய அணி 178 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி 2வது இன்னிங்ஸ்ஐ தொடங்கியது. இதில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி வெளியேறினார்.

பின்னர் ஆடிய கேஎல் ராகுல் 35 ரன்களிலும், கேப்டன் சுப்மன் கில் 8 ரன்களிலும், படிக்கல் 44 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். இந்த நிலையில் ரிஷப் பண்ட் களம் புகுந்தார். தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் சிக்ஸ், பவுண்டரி என்று விளாசி தள்ளினார். அதிலும் ஸ்பின்னர்கள் பவுலிங்கில் ரிஷப் பண்ட் ஆடிய ஆட்டம் இலங்கை அணியை மிரள வைத்தது.
மறுமுனையில் ஆடிய துருவ் ஜுரெல் 7 ரன்களில் ஆட்டமிழந்த போதும் கூட, ரிஷப் பண்ட் அட்டாக்கை நிறுத்தவில்லை. சிறப்பாக ஆடிய அவர், 52 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் அடிக்கும் 20வது அரைசதம் இதுவாகும். தொடர்ந்து அதிரடியாக ரன்களை சேர்ந்த அவர் 69 பந்துகளில் 2 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
ரிஷப் பண்ட் விக்கெட்டானது இலங்கை அணி வீரர்களுக்கு நிம்மதியை கொடுத்தது என்றே சொல்லலாம். இந்த போட்டியில் ரிஷப் பண்ட் 2 சிக்சர்களை விளாசியதன் மூலமாக மிகப்பெரிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 100 சிக்சர்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.
அதேபோல் 100 சிக்சர்களை விளாசிய 4வது வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். அதேபோல் 4,918 பந்துகளில் 100 சிக்சர்களை ரிஷப் பண்ட் அடித்துள்ளார். இதன் மூலமாக குறைந்த பந்துகளை எதிர்கொண்டு 100 சிக்ஸ் அடித்த வீரராகவும் ரிஷப் பண்ட் முன் நிற்கிறார். கடந்த சில தொடராக ரிஷப் பண்ட் ஃபார்ம் அவுட்டில் இருந்த சூழலில், இந்த இன்னிங்ஸ் இந்திய ரசிகர்களுக்கு பதிலடியாக அமைந்துள்ளது.


