• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இணைய நிதி மோசடி: இலங்கையில் 60 இந்தியர்கள் கைது- 135 கைத்தொலைபேசிகள் பறிமுதல் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 30, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
இணைய நிதி மோசடி: இலங்கையில் 60 இந்தியர்கள் கைது- 135 கைத்தொலைபேசிகள் பறிமுதல் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கையில் இணைய நிதி மோசடியில் ஈடுபட்டதாக நம்பப்படும் 60 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 135 செல்போன்கள், 57 மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு புறநகர்ப் பகுதிகளான மடிவெல, பத்தரமுல்லை, மேற்கு கடலோர நகரமான நீர்கொழும்பு ஆகிய இடங்களிலிருந்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீஸ் செய்தி தொடர்பாளர் எஸ்.எஸ்.பி நிஹால் தல்துவா கூற்றுப்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த பகுதிகளில் ஒரே நேரத்தில் நடத்திய சோதனையில் 135 செல்போன்கள், 57 மடிக்கணினிகள் கைப்பற்றப்பட்டன.

சமூக ஊடக தொடர்புகளுக்கு பணம் தருவதாக வாட்ஸ்அப் குழுவில் விளம்பரப்படுத்தப்பட்டு, அதன் மூலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு முதலில் சிறிதளவு பணம் கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர், அவர்களிடம் பணம் டெபாசிட் செய்ய வற்புறுத்தப்பட்ட ஒரு திட்டம் தெரியவந்தது.

பெர்டெனியாவில், தந்தை, மகன் ஆகிய இருவர் மோசடியாளர்களுக்கு உதவியதாக ஒப்புக்கொண்டதாக ‘டெய்லி மிரர் லங்கா’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

நீர்கொழும்புவில் ஒரு சொகுசு வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள் மூலம் 13 சந்தேக நபர்களை ஆரம்பத்தில் போலீசார் கைது செய்தனர். அதன்பின்னர் அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் மேலும் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.

துபாய், ஆப்கானிஸ்தானில் உள்ள சர்வதேச தொடர்புகளும் இதில் இருப்பது தெரியவந்தது. இவர்கள் நிதி மோசடி, சட்டவிரோத பந்தயம், பல்வேறு சூதாட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.



Read More

Previous Post

பிரதமரின் கதி சக்தி திட்டத்தால் சீனாவை முந்தும் இந்தியா: சர்வதேச முதலீட்டு நிறுவனம் கணிப்பு | India overtakes China by PM s gati Shakti project

Next Post

இன்று நள்ளிரவு எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Next Post
இன்று நள்ளிரவு எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இன்று நள்ளிரவு எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin