நீண்டகாலமாக பல்வேறு காரணங்களினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால், இன்று (20) சம்பிரதாய பூர்வமாக மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் தென்மராட்சி வலயக்கல்வி பணிப்பாளர் மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் உட்பட்ட பாடசாலை சமூகத்தினர் பலர்கலந்து கொண்டிருந்தனர்
யாழ்ப்பாணம், தென்மராட்சி வலயத்தில் மிகவும் பழைமைவாய்ந்த 150 ஆவது வருடத்தை நெருங்கும் வரலாற்றை கொண்ட பாடசாலைகளுள் ஒன்றான யா/ மட்டுவில் மகாவித்தியாலயத்தில் தரம் 1 முதல் A/L வரையிலான வகுப்புக்கள் இருந்து வந்தது.
ஆனால் சில வருடங்களாக பல காரணங்களால் இப்பாடசாலையில் ஆரம்ப பிரிவு வகுப்புகள் அதிகாரிகளால் இடைநிறுத்தப்பட்டிருந்தன.
இதையடுத்து குறித்த பகுதி கல்வி சமூகத்தினரும், நலன்விரும்பிகளும், பெற்றோரும் தமது பாடசாலையில் ஆரம்ப வகுப்புக்களை இடைநிறுத்தியமைக்கு எதிராக போராட்டங்களை முன்னெடுத்திருந்ததுடன், அவ்விடயம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினது கவனத்திற்கும் கொண்டு வந்திருந்தனர்.
அதனடிப்படையில் குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்காக பாடசாலைக்கு அமைச்சர் நேரில் சென்று, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்விப்புலத்தினரின் கருத்துக்களை ஆராய்ந்தறிந்துகொண்டார்.
இந்நிலையில் குறித்த பிரச்சனை தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உடனடியாக துறைசார் தரப்பினரது கவனத்திற்கு கொண்டுசென்று மீளவும் குறித்த ஆரம்ப பிரிவு வகுப்புகளை முன்னெடுத்து செல்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தார்.
இதையடுத்து இன்றையதினம் மட்டுவில் ஸ்கந்தவிரேதய பாடசாலையின் ஆரம்ப பிரிவு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் சம்பிரதாய பூர்வமாக மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
யாழ். விசேட நிருபர்


&w=1200&resize=1200,675&ssl=1)