• Login
Friday, July 4, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

இங்கிலாந்து அணியை வீழத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த இந்திய அணி!

GenevaTimes by GenevaTimes
March 9, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
இங்கிலாந்து அணியை வீழத்தி டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த இந்திய அணி!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. முதல் போட்டியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி தொடரின் ஆரம்பத்திலேயே முன்னிலைப் பெற்று அசத்தியது. 

ஆனால் அதன்பின் நடைபெற்ற போட்டிகளில் இந்திய அணி அடுத்தடுத்து வெற்றிகளை பதிவுசெய்து அசத்தியதுடன், 3-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. 

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியில் ஸாக் கிரௌலியைத் தவிர மற்ற எந்த வீரரும் பெரிதளவில் சோபிக்க தவறியதால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் ஆல் அவுட்டானது. 

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

இதையடுத்து முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் ஆகியோர் அடுத்தடுத்து சதங்களைப் பதிவுசெய்து அசத்தினர். அதன்பின் 103 ரன்களில் ரோஹித் சர்மாவு, 110 ரன்களில் ஷுப்மன் கில்லும் தங்களது விக்கெட்டை இழந்தனர். 

மேலும் அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 57 ரன்களையும், சர்ஃப்ராஸ் கான் 56 ரன்களையும், அறிமுக வீரர் தேவ்தத் படிக்கல் 65 ரன்களையும் சேர்த்ததன் மூலம் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 477 ரன்களைச் சேர்த்தது. 
இங்கிலாந்து அணி தரப்பில் சோயப் பஷீர் 5 விக்கெட்டுக்ளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன், டாம் ஹார்ட்லி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். 

அதன்பின் 259 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 2 ரன்களிலும், ஸாக் கிரௌலி ரன்கள் ஏதுமின்றியும், ஒல்லி போப் 19 ரன்களிலும் என அடுத்தடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். 

அதன்பின் இணைந்த ஜோ ரூட் – ஜானி பேர்ஸ்டோவ் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இதில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜானி பேர்ஸ்டோவ் 3 பவுண்டரி, 3 சிக்சர்கள் என 39 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, சோயப் பஷீர், மார்க் வுட் ஆகியோரும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

ஆனாலும் மறுபக்கம் பொறுபான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜோ ரூட் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 12 பவுண்டரிகளுடன் 84 ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்தார். 

இதனால் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 195 ரன்களிலேயே அல் அவுட்டானது. இந்திய அணி தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 5 விக்கெட்டுகளையும், ஜஸ்ப்ரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதன்மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றி சாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 





நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW GROUP 01 அல்லது JOIN NOW GROUP 02

NEWS21

நியூஸ்21 இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்…

NEWS21

நியூஸ்21 Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்…



Read More

Previous Post

பொன்னமராவதியில் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி கட்டிடம்!! திறப்பு விழா!!

Next Post

Meta Title: இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகல்

Next Post
Meta Title: இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகல்

Meta Title: இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin