‘அசாதாரண சூழ்நிலைகள்‘, ‘பொது நலன்களை‘ கருதி அரசு முடிவெடுத்துள்ளதாக புரிந்து கொள்ளுகின்றேன். இருப்பினும் இத்தகைய குறிப்பிடத்தக்க முடிவின் பின்னணியில் உள்ள காரணத்தை அரசு தெளிவுபடுத்துவது அவசியம் என நம்புகிறேன். இந்த விலை உயா்வு, அவசியமான ஆஸ்துமா, காசநோய், இருமுனையப் பிவு(உளநோய்), கண் அழுத்தநோயான கிளாக்கோமா போன்ற நோய்களுக்கான முக்கிய மருந்துகள் என என்பதால் இது லட்சக்கணக்கான மக்களுக்கு பாதிக்கிறது. ஏற்கனவை நோயாளிகளும் அவா்களது குடும்பங்களும் தேவையான சிகிச்சைகளுக்கு அணுகும்போது, நிதி சவால்களை எதிா்கொள்கின்றனா். இந்த மருந்துகளின் விலையில் திடீா் அதிகரிப்பு இந்த நோயாளிகளுக்கு கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும். இது நோயாளிகளின் ஆரோக்கிய விளைவுகளில் சமரசம் செய்யக்கூட நேரிடும்.

&w=1200&resize=1200,675&ssl=1)