டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் குரூப் 1 பிரிவில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறப் போகும் அணி எது? என்பதை தீர்மானிக்க போகும் மைதானத்தில் நேற்று மழை வெளுத்து வாங்கியது.
‘குரூப்-1’ பிரிவில் இந்தியா 4 புள்ளிகளோடும், ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் தலா 2 புள்ளிகளோடும், வங்கதேசம் புள்ளிகள் ஏதுமின்றியும் உள்ளன. இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளின் செயின்ட் லுாசியாவில் இன்று நடக்கும் ‘சூப்பர்-8’ போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன. இன்று ஆஸ்திரேலியாவை வென்றால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.
ஒருவேளை இன்று இந்தியா தோல்வியடைந்தால், இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய, நாளை ஆப்கானிஸ்தான்-வங்கதேசம் மோதும் போட்டியின் முடிவுக்காக காத்திருக்க வேண்டும். இதில் ஆப்கானிஸ்தான் வென்றால், இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் தலா 4 புள்ளி பெறும். அப்போது அதிக ரன்ரேட்கள் கொண்ட அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.
மாறாக நாளைய போட்டியில் வங்கதேசம் வெற்றி பெற்றால், ஆப்கானிஸ்தான் வெளியேறும். இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
இதையும் படிக்க:
இந்திய அணியும் வெளியேற வாய்ப்பு.. அரையிறுதிக்கு எந்த அணி முன்னேறும்?
ஆனால் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா தோற்று, நாளை ஆப்கானிஸ்தான் வென்றால், இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
செயின்ட் லுாசியாவில் இன்றைய போட்டி கனமழை காரணமாக கைவிடப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அப்போது இந்தியா 5 புள்ளிகளோடு அரையிறுதிக்கு முன்னேறும். ஆனால் ஆஸ்திரேலியா அணி 3 புள்ளிகளுடன் இருக்கும்.
நாளை நடைபெறும் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றால் ஆப்கானிஸ்தான் 4 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறும். ஆனால் நாளை நடைபெறும் போட்டியில், பங்களாதேஷ் வெற்றிபெற்றால், ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு முன்னேறும் என்பது குறிப்பிடதக்கது.
.
&w=750&resize=750,375&ssl=1)
