Last Updated:
கடந்த 25 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடந்த மிகவும் பயங்கரமான துப்பாக்கிச் சூடு இது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில் யூதர்கள் நடத்திய நிகழ்ச்சியில் மர்ம நபர்கள் 2 பேர் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் உயிரிழந்தனர். 11-க்கும் அதிகமானோருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள பிரபல போண்டி கடற்கரை பகுதியில்தான் இந்த சம்பவம் இன்று மாலை நேரத்தில் நடந்திருக்கிறது. தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இன்னொருவரை போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
யூதர்களின் முக்கிய பண்டிகையான ஹனுக்காவின் முதல் இரவை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி நடைபெற்றபோது துப்பாக்கிச் சூடு நடந்திருக்கிறது. இந்த சம்பவத்திற்கு ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் பயங்கரவாத நோக்கத்துடன் நடத்தப்பட்டதா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவை பொறுத்த அளவில் அங்கு துப்பாக்கிச் சூடு நடப்பது என்பது மிகவும் அரிதான ஒன்றாக உள்ளது. ஏனென்றால் அங்கு ஆயுத சட்டங்கள் மிக கடுமையாக உள்ளன.
December 14, 2025 4:42 PM IST
ஆஸ்திரேலியாவில் யூதர்கள் மீது 2 பேர் பயங்கர துப்பாக்கிச்சூடு.. 10 பேர் உயிரிழப்பு.. போலீசார் விசாரணை


