• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஆவண மோசடி: தேசிய கலை மற்றும் கலாசாரத் துறையின் முன்னாள் இயக்குனர் மற்றும் கலைஞருக்கு சிறைத்தண்டனை! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 25, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
ஆவண மோசடி: தேசிய கலை மற்றும் கலாசாரத் துறையின் முன்னாள் இயக்குனர் மற்றும் கலைஞருக்கு சிறைத்தண்டனை! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குவந்தான்:

ஆவணங்களை மோசடி செய்த வழக்கில் தேசிய கலை மற்றும் கலாசாரத் துறையின் (JKKN) முன்னாள் இயக்குனர் மற்றும் ஒரு கலைஞர் ஆகிய இருவருக்கும் தலா ஆறு மாத சிறைத்தண்டனையும், 10,000 ரிங்கிட் அபராதமும் விதித்து இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

முன்னாள் இயக்குனர் டயாங் கார்த்தினி அவாங் புஜாங் (49) மற்றும் கலாசாரக் கலைஞர் மார்சியானா சே முகமட் அமீன் (39) ஆகிய இருவர் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிபதி சஸ்லினா சாஃபி அறிவித்தார்.

இருவருக்கும் தலா 6 மாத சிறை, தலா RM10,000 அபராதம். அபராதத்தைச் செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும். மேலும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட RM980 ரொக்கப் பணத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 26-ஆம் தேதி, துறையின் கலாசாரக் குழுவிற்காக ‘மான் தலை’ (Deer-head) அலங்காரப் பொருட்கள் வாங்கியதாகக் கூறி, ‘அனாஸ் நியாகா’ (Anas Niaga) என்ற பெயரில் RM9,920 மதிப்பிலான போலிப் பணப்பரிமாற்ற ஆவணத்தைத் தயாரித்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

உண்மையில் அனாஸ் நியாகா நிறுவனம் அத்தகைய சேவைகளை வழங்கவில்லை என்பதை அறிந்திருந்தும், ஏமாற்றும் நோக்கில் இவர்கள் இந்த ஆவணங்களைப் பயன்படுத்தியுள்ளனர்.

தண்டனை அறிவிக்கப்பட்ட போதிலும், அவர்கள் மேல்முறையீடு செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அதுவரை சிறைத்தண்டனையை நிறுத்தி வைக்க (Stay of execution) நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதே வேளையில், அவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்ட பிணைத் தொகை RM10,000-லிருந்து RM12,000 ஆக அதிகரிக்கப்பட்டது. தண்டனைக்கு எதிரான மேல்முறையீடு முடியும் வரை அவர்கள் வெளியே இருக்க அனுமதிக்கப்படுவார்கள்.



Read More

Previous Post

2026 இல் இந்த ராசிகளுக்கு எல்லாம் கட்டாயம் இது நடக்குமாம்! பாபா வாங்காவின் அதிரடி கணிப்பு

Next Post

சுற்றுச்சூழல் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

Next Post
சுற்றுச்சூழல் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

சுற்றுச்சூழல் சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin