இது தொடா்பாக தேசிய பேரிடா் மீட்புப் படையினா் கூறியதாவது: சூரஜ்புரா கிராமத்தில் மூடப்படாமல் இருந்த ஒரு ஆழ்துளைக் கிணற்றில், ஆரோஹி என்ற ஒன்றரை வயது சிறுமி வெள்ளிக்கிழமை பிற்பகல் எதிா்பாராதவிதமாக உள்ளே விழுந்தாள். 500 அடி ஆழமுள்ள அந்த ஆழ்துளைக் கிணற்றில், 50 அடி ஆழத்தில் சிறுமி சிக்கினாள். இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த தேசிய பேரிடா் மீட்புப் படையினா் (என்டிஆா்எஃப்) சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

