Last Updated:
223 பந்துகளை எதிர்கொண்ட ஆயுஷ் பதோனி 3 சிக்சர் மற்றும் 13 பவுண்டரியுடன் 204 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார்.
வடக்கு மண்டல அணியின் பேட்ஸ்மேன் ஆயுஷ் பதோனியின் இரட்டை சத உதவியுடன் துலீப் கோப்பை போட்டித் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு வடக்கு மண்டல அணி முன்னேறியுள்ளது.
பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் வடக்கு மண்டல அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 405 ரன்கள் குவித்தது. இதன்பின்னர் பேட்டிங் செய்த கிழக்கு மண்டல அணி 230 ரன்கள் எடுத்திருந்து.
அதைத் தொடர்ந்து 2 ஆவது இன்னிங்சை தொடங்கிய வடக்கு மண்டல அணியில் கேப்டன் அன்கித் குமார் சிறப்பாக விளையாடி 198 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். யாஷ் துல் 133 ரன்களும், ஆயுஷ் பதோனி 204 ரன்களும் எடுத்தனர்.
223 பந்துகளை எதிர்கொண்ட ஆயுஷ் பதோனி 3 சிக்சர் மற்றும் 13 பவுண்டரியுடன் 204 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். 146.2 ஓவர்களில் வடக்கு மண்டல அணி 4 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது 658 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
கிழக்கு மண்டல அணியை விடவும் வடக்கு மண்டல அணி 833 ரன்கள் முன்னிலை பெற்றதால் ஆட்டம் டிராவில் முடிந்தது. கூடுதல் ரன்கள் முன்னிலை பெற்ற நிலையில் வடக்கு மண்டல அணி அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது.
August 31, 2025 5:54 PM IST


