Last Updated:
ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்பட்டது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்த சம்பவம், அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்.5ஆம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தனித்தனியாக போட்டியிடுவதால் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த 8 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
இதையும் படிக்க: Gas Cylinder Price | பட்ஜெட் நாளன்று வந்த சூப்பர் அறிவிப்பு… குறைந்தது வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை
ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்கள் 8 பேருக்கும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படும் நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை எனக்கூறி 8 சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவிகளில் இருந்து விலகியுள்ளனர்.
February 01, 2025 11:13 AM IST


