இந்நிலையில், காரசாரமாக நடைபெற்ற விவாதங்களுக்கு இடையே தில்லி பொதுப்பணித் துறை அமைச்சா் பா்வேஷ் சாஹிப் சிங் பதிலளித்துப் பேசுகையில், ‘இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விசாரிக்கப்படும். சிசிடிவி நிறுவுவதில் பாஜக தொகுதிகள் புறக்கணிக்கப்பட்ட விவகாரத்தில் ஏதாவது தில்லுமுல்லு, குற்றம் நிரூபிக்கப்பட்டால் தொடா்புடைய அதிகாரிகள் தண்டிக்கப்படுவாா்கள். மேலும், கடந்த ஆட்சியாளா்களால் புறக்கணிக்கப்பட்ட அந்த 8 பாஜக தொகுதிகளிலும் முன்னுரிமை அடிப்படையில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்படும்’‘ என்றாா்.

