Last Updated:
2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது அவர் ஆப் கி பார் மோடி சர்கார் வாசகத்தை உருவாக்கியதில் பின்னணியில் இருந்தவர் பியூஷ் பாண்டே.
“2014 தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சார வாக்கியத்திற்காக பியூஷ் பாண்டேவை சுமார் 7 மணி நேரம் சமாதானம் செய்தேன். ஆனாலும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்தார்” என விளம்பர ஜாம்பவான் பியூஷ் பாண்டே நினைவேந்தல் நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியுள்ளார்.
விளம்பரத்துறையில் மக்களை ஈர்க்கும் ‘வாசகம்’ மூலம் தனக்கென தனி முத்திரை பதித்தவர் பியூஷ் பாண்டே. டைரி மில்க், ஏசியன் பெயிண்ட்ஸ், வோடோபோன் பக் நாய்க்குட்டி உள்ளிட்ட பல்வேறு விளம்பரங்களை உருவாக்கியவர் பியூஷ் பாண்டே. இந்திய விளம்பரத்துறையில் முன்னோடியாக திகழ்ந்தார். ஏசியன் பெயின்ட்டுக்கு இவரின் ‘மகிழ்ச்சிக்கும் நிறமுண்டு’ என இந்தியில் இவர் உருவாக்கிய வாசகம் மிகவும் பிரபலம்.
2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது இவர் உருவாக்கிய ஆப் கி பார் மோடி சர்கார் என்ற வாசகம், பிரதமர் மோடியின் வெற்றிக்கு பெரும் பங்காற்றியதாக கூறப்பட்டது. பத்ம ஸ்ரீ விருது பெற்ற இவர், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 24ஆம் தேதி காலமானார்.
இந்நிலையில் இன்று பியூஷ் பாண்டேவின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், 2014ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது அவர் ஆப் கி பார் மோடி சர்கார் வாசகத்தை உருவாக்கியதில் பின்னணியில் இருந்தவர் பியூஷ் பாண்டே எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் பியூஷ் கோயல், பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பியூஷ் பாண்டே முதலில் மறுத்ததையும் பிறகு அவர் கொடுத்த தேர்தல் பிரச்சார வாக்கியத்தையும் நினைவுகூர்ந்து பேசினார்.
“பியூஷ் பாண்டேவுடன் இதற்காக நான் ஏழு மணி நேரம் அமர்ந்து அவரை சமாதானம் செய்தும் அவர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்தார். மறு நாள் காலை என்னை அழைத்த அவர், ‘யே தேஷ் கி ஜரூரத் ஹை’ (இதுதான் நாட்டின் தேவை) என்று தெரிவித்தார். பியூஷ் பாண்டே பொதுவாக தேர்தல் பிரச்சாரங்களை செய்ததில்லை. ஆனால், இதனை நாட்டிற்கான கடமையாக ஏற்று செய்தார்.
‘Piyush Pandey didn’t normally do political campaign. He did this one as a responsibility for his country,’ Piyush Goyal recounts how the late advertising legend came up with the slogan ‘Ab ki baar, Modi sarkaar’. Goyal says Pandey agreed to do the campaign, saying ‘Yeh desh ki… pic.twitter.com/pBnuWkmVsO
— CNBC-TV18 (@CNBCTV18News) November 2, 2025
இந்தியாவின் மிக முக்கியமான அரசியல் பிரச்சார முழுக்கத்தை உருவாக்கியதின் பின்னணியில் இருந்தவர் பியூஷ் பாண்டே. பொதுவாக இதுபோன்ற வாசகங்கள் உருவாக்குபவர்கள் தாங்கள்தான் இதனை செய்தது என சொல்லி கொள்வார்கள். ஆனால், பியூஷ் பாண்டே அவர் பெயர் வெளியேவர கூட விரும்பாதவர். அதுதான் அவரது குணம்.
வெறும் நான்கு சொற்களில் எளிய மக்களுக்கும் மிகப்பெரிய செய்தியை கொண்டு சென்று சேர்ப்பதில் வல்லவர் பியூஷ் பாண்டே. நீங்கள் இந்தியாவில் வேலை செய்ய விரும்பினாலும், இந்திய மக்களுடன் இணைய வேண்டும் என்றாலும் இந்தியில் சிந்தியுங்கள் என்பது பியூஷ் பாண்டேவிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடம்” என பியூஷ் கோயல் தெரிவித்தார்.
November 02, 2025 3:48 PM IST
”ஆப் கி பார் மோடி சர்கார் உருவாக்கம்; நாட்டிற்கான கடமையாக ஏற்று செய்தவர் பாண்டே” – பியூஷ் கோயல்


