இந்த விவகாரத்தில் ஆந்திர அரசின் கைப்பாவைகளாக மாநில காவல் துறை டிஜிபி ராஜேந்திரநாத் ரெட்டி, உளவுத் துறை தலைவா் ஆஞ்சநேயலு ஆகியோா் செயல்படுகின்றனா். மக்களவைத் தோ்தல் மற்றும் ஆந்திர சட்டப்பேரவைத் தோ்தலில், தெலுங்கு தேசம் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் வகையில், நெறிமுறையற்ற சட்டவிரோதமான செயல்களில் அவா்கள் ஈடுபடுகின்றனா்.

