Last Updated:
மை ஆதார் போர்டல் அல்லது mஆதார் மொபைல் அப்ளிகேஷன் மூலமாக ஆதார் PVC அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அதிகரித்துள்ளது,
ஆதார் PVC அட்டை பெறுவதற்கான கட்டணத்தை தற்போது UIDAI உயர்த்தி உள்ளது. பழைய கட்டணங்கள் என்ன?, மாற்றம் செய்யப்பட்டுள்ள புதிய கட்டணங்கள் யாவை?, ஆதார் PVC அட்டை ஒரிஜினல் ஆதார் அட்டையை விட எப்படி வேறுபடுகிறது என்பது சம்பந்தமான விளக்கமான தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மை ஆதார் போர்டல் அல்லது mஆதார் மொபைல் அப்ளிகேஷன் மூலமாக ஆதார் PVC அட்டைக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணங்களை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அதிகரித்துள்ளது. இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ள கட்டணங்கள் ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வந்தது.
ஆதார் PVC அட்டை என்பது நீண்ட நாள் உழைக்கக்கூடிய, நல்ல தரமான ஒரு அட்டையாகும். இந்த ஆதார் அட்டையானது கிரெடிட் கார்டு அளவில் கிடைக்கிறது. மேலும் இது மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களோடு வருகிறது. ஆதார் PVC அட்டை சேவையைப் பெறுவதற்கான கட்டணமானது வரிகள் உட்பட 50 ரூபாயிலிருந்து 75 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
UIDAI வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, “கடந்த சில வருடங்களாகவே ஆதார் PVC அட்டையை உற்பத்தி செய்வதற்கான பொருட்களின் விலை, பிரிண்டிங், பாதுகாப்பான டெலிவரி மற்றும் லாஜிஸ்டிக் ஆகியவையும் அதிகரித்துள்ளது. உற்பத்தி செய்வதற்கான செலவு மற்றும் தொடர்ந்து அதிக தரமான சேவை டெலிவரியை உறுதிப்படுத்துவதன் பொருட்டு தற்போதுள்ள விலையை உயர்த்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.”
ஆதார் PVC அட்டை என்பது வழக்கமாக கிடைக்கும் ஒரிஜினல் ஆதாரின் ஒரு சிறிய வடிவமாகும் மற்றும் நீடித்து உழைக்கக் கூடியது. இது eஆதார் மற்றும் பேப்பர் ஆதார் கடிதத்தைப் போன்ற அதே செல்லுபடியாகும் தன்மையைக் கொண்டுள்ளது.
ஆதார் நம்பர் உரிமையாளரிடமிருந்து ஆதார் PVC அட்டைக்கான ஆர்டரைப் பெற்ற பிறகு 5 வேலை நாட்களுக்குள் UIDAI அச்சிடப்பட்ட ஆதார் PVC அட்டையை தபால் மூலமாக அனுப்பிவைக்கும். PVC அட்டை என்பது இந்திய தபால் நிலையத்தின் ஸ்பீட் போஸ்ட் சேவை மூலமாக டெலிவரி செய்யப்படுகிறது. ஆதார் டேட்டா பேஸில் பதிவு செய்யப்பட்டுள்ள முகவரிக்கு டெலிவரி செய்யப்படும்.
January 07, 2026 8:17 PM IST


