ஆண் தொண்டர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சூரஜ் ரேவண்ணா கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவில் பேரனும் ரேவண்ணாவின் மூத்த மகனுமான சூரஜ் ரேவண்ணா கர்நாடக மேலவை உறுப்பினராக உள்ளார். இந்நிலையில், இவர், மதசார்ப்பற்ற ஜனதா தள ஆண் தொண்டர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். அப்போது, சூரஜ் ரேவண்ணாவின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் தொண்டர்கள் காலில் விழுந்து கதறி அழுதுள்ளனர்.
ஆனால் அவர்களை சூரஜ் தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்திருக்கிறார். அப்போது, “அரசியலில் உன்னை பெரிய ஆளாக்குவேன். நல்ல வேலை வாங்கித் தருவேன்” என்றெல்லாம் தொண்டர்களிடம் ஆசைவார்த்தை காட்டியுள்ளார். மேலும் இந்த விஷயத்தை வெளியில் சொன்னால் அவர்களை கொன்றுவிடுவதாக மிரட்டியும் இருக்கிறார்.
இந்நிலையில், இது தொடர்பாக பாதிக்கப்பட்ட தொண்டர் ஒருவர் பரபரப்பு புகார் அளித்தார். அதன் அடிப்படையில், ஹாசனில் தங்கியிருந்த கர்நாடக மேலவை உறுப்பினர் சூரஜ் ரேவண்ணாவை காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில், சூரஜ் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கு, சிஐடி விசாரணைக்கு மாற்றப்படுவதாக அம்மாநில உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:
கள்ளக்குறிச்சி சென்ற கமல் மக்களை சந்தித்து ஆறுதல்… அளவோடு குடிக்க அட்வைஸ்!
பாலியல் வழக்கில் பிரஜ்வலுக்கு உடந்தையாக இருந்ததாக கைதான தந்தை ரேவண்ணாவுக்கு ஜாமினும் தாய் பவானிக்கும் முன்ஜாமினும் நீதிமன்றம் வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்தடுத்து நடக்கும் இந்த சம்பவங்களால் கர்நாடாகாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)