Last Updated:
ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 முறை ஆட்ட நாயகன் விருதை வென்ற உலகின் ஒரே பேட்ஸ்மேன் சவுரவ் கங்குலி ஆவார்.
கொல்கத்தாவின் இளவரசர் என்று அழைக்கப்படும் கங்குலி கிரிக்கெட் உலகில் தனது அற்புதமான ஆட்டத்தால் இந்தியாவுக்கு பெருமை தேடிக் கொடுத்தார். கங்குலி தனது தலைமையின் கீழ் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகளை வழங்கினார்.
கங்குலி தனது கிரிக்கெட் கெரியரில் 5 முக்கிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இது எந்தவொரு கிரிக்கெட் வீரரும் எளிதில் நெருங்க முடியாத சாதனையாக இதுவரை இருந்து வருகிறது. அதுபற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 முறை ஆட்ட நாயகன் விருதை வென்ற உலகின் ஒரே பேட்ஸ்மேன் சவுரவ் கங்குலி ஆவார். அவர் இந்த சாதனையை 1997 ஆம் ஆண்டு நிகழ்த்தினார். செப்டம்பர் 14 முதல் செப்டம்பர் 19 வரை இந்த விருதை வென்றார்
1999 ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கைக்கு எதிராக கங்குலி 183 ரன்கள் எடுத்து அற்புதமான இன்னிங்ஸை விளையாடினார் . உலகக் கோப்பையில் இந்திய பேட்ஸ்மேனின் மிகப்பெரிய இன்னிங்ஸ் ஸ்கோர் இதுவாகும். இதுவரை எந்த பேட்ஸ்மேனாலும் கங்குலியின் இந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.
இடது கை பேட்ஸ்மேன் சவுரவ் கங்குலி, ஒருநாள் போட்டிகளில் 10000 ரன்கள் எடுத்த உலகின் 5 வீரர்களில் ஒருவராக உள்ளார். அதே போல் 10 விக்கெட்டுகள் மற்றும் 100 கேட்சுகளையும் அவர் எடுத்துள்ளார்.
தனது முதல் டெஸ்டில் சதம் அடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் கங்குலி ஆவார். தனது அச்சமற்ற பேட்டிங்கால் பந்து வீச்சாளர்களை பயமுறுத்திய கங்குலி, இடது கை பேட்ஸ்மேனாக ஒருநாள் போட்டிகளில் 22 சதங்களை அடித்த ஒரே இந்திய வீரராக உள்ளார்.
ஐசிசி கோப்பையில் 3 சதங்கள் அடித்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையையும் இவர் ஏற்படுத்தியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் கங்குலியின் பேட்டிங் சராசரி 40க்கு மேல் இருந்தது. 113 டெஸ்ட் போட்டிகளில் அவர் இந்த சராசரியை தக்க வைத்துக் கொண்டார். 2003 உலகக் கோப்பையில் அவர் மூன்று சதங்கள் அடித்தார். ஒரு உலகக் கோப்பையில் இந்த சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய பேட்ஸ்மேன் இவர்தான்.
July 18, 2025 9:18 PM IST


