Singapore: ஜாலான் புசார் தெருக்களில் அக்டோபர் 29 ஆம் தேதி அன்று காலை 11 மணியளவில் ஆடவர் ஒருவர் உடையின்றி ஓடிக்கொண்டிருந்தார்.
ஆடை அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிவந்த அவர், பெண்டிமியர் சாலையில் டாக்ஸியுடன் மோதி விபத்தில் சிக்கியதாக ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.
சிங்கப்பூரின் பிரபல “முஸ்தபா சென்டர்” ஆன்லைன் விற்பனை தளம் தொடக்கம் – வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!
காயமடைந்த நிலையில் இருந்த அந்த ஆடவர் பின்னர் சுமார் 1.5 கி.மீ தூரம் ஓடி, இறுதியில் ஜாலான் புசாரை அடைந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
வழியில், அவர் ஏன் தனது ஆடைகளைக் கழற்றினார் என்பதற்கான காரணங்கள் தெரியவில்லை என்று ஷின் மின் கூறியது.
அக்.29 ஆம் தேதி காலை 11 மணியளவில், பெண்டிமியர் சாலையில் நடந்த விபத்து குறித்து தகவல் கிடைத்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.
அதன் பின்னர் அவர் டான் டோக் செங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
காவல்துறை விசாரணைகள் தொடர்கின்றன.
டாக்ஸி மேற்கூரையில் விழுந்தார்
இந்த விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பறந்து சென்று டாக்ஸி மேற்கூரையில் விழுந்தார் என பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
இதில் டாக்ஸியின் பின்புற கண்ணாடி உடைந்த நிலையில் வாகனம் பலத்த சேதமடைந்தது.
The post ஆடையின்றி சுமார் 1.5 கி.மீ தூரம் ஓடிய ஆடவர் – ஜாலான் புசாரில் பரபரப்பு appeared first on Tamil Daily Singapore.

