Last Updated:
வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் ஆடை அணிகலன்கள் வரை எல்லாம் ஒரே இடத்தில் கிடைப்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
ஆடி மாசம் துவங்கப் போகுது. இனி வாடிக்கையாளர்களைக் கவர துணிக்கடைகளில் பலவிதங்களில் ஆஃபர் அறிவிக்கப்படும். இந்நிலையில் தூத்துக்குடி WGC ரோட்டில் அமைந்துள்ள டிஎஸ்எப் கிராண்ட் பிளாஸா மாலில் மக்களைக் குஷியாக்கும் வகையில் கிராண்ட் ஷாப்பிங் எக்ஸ்போ நடைபெற்று வருகிறது.
இந்த எக்ஸ்போவில் வீட்டு உபயோகப் பொருட்கள், அழகு சாதனங்கள், பேஷன் மற்றும் டிரெண்டி அணிகலன்கள், ஹோம் டெக்கர், தொழில்நுட்ப சாதனங்கள் என பல்வேறு வகைப் பிரிவுகளில் ஸ்டால்கள் வைக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த எக்ஸ்போவில் பல டிசைனர் பிராண்டுகள், ஹண்ட்லூம் ஷோ ரூம்கள், புடவை விற்பனையாளர்கள், நவீன ஆடைகள் தயாரிப்பாளர்கள் என பலர் கலந்து கொண்டு தனித்துவமான ஆடைகளை மக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.
இந்த எக்ஸ்போவில் சில்க் சேலைகள், பட்டுப் புடவைகள், டிசைன் குர்த்தி, பிரைடல் கலெக்ஷன் என அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் கலெக்ஷன் இடம்பெற்றுள்ளது.
வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் ஆடை அணிகலன்கள் வரை எல்லாம் ஒரே இடத்தில் கிடைப்பதால் பொதுமக்கள் ஆர்வமுடன் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.
Thoothukkudi,Tamil Nadu
July 15, 2025 10:52 AM IST

