ஆடி மாதம் என்றாலே கோயில் திருவிழாக்கள், ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடி வெள்ளி போன்றவற்றிக்கு சிறப்பு மாதமாக விளங்குகிறது. ஆடிப்பிறப்பு என்பது இந்துக்களால் கொண்டாடப்படும் ஒரு திருநாளாகும். ஆடி மாதம் தெய்வீக பண்டிகைகள் தொடங்கும் மாதமாகவும், அம்மனுக்கு உரிய மாதமாகவும் கருதப்படுகிறது.
ஆடி மாதத்தில் சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி அதிகமாக இருப்பதாக புராணங்களில் கூறுவதாக நம்பப்படுகிறது.ஆடிப் பிறப்பு தொடங்கி ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம் ஆகியன பண்டிகைகளாக அமைவதால் ஆடிமாதம் சிறப்புப் பெறுகின்றது.ஆதலால் கோயில் பூஜைகள், பக்தர்கள் வழிபாடு அதிகரிக்கும், பூக்களின் தேவைகளும் அதிகரிக்கும். இந்த வருட ஆடிமாதம் முதல் வெள்ளிக்கிழமையிலே பூக்களின் வியாபாரம் அனல் பறக்க தொடங்கியுள்ளது என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்ற வாரம் 250, 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட முல்லைபூ, ஆடி முதல் வெள்ளிக்கிழமை அன்று 500 ரூபாய்க்கும், 400 ரூபாய்க்கு விற்கப்பட்ட குண்டு மல்லி 550 க்கும், சாக்லேட் ரோஸ், பட்டன் ரோஸ் கிலோ 240 ரூபாய்க்கும், சென்ற வாரம் 70,80 ரூபாய்க்கு விற்கப்பட்ட பன்னீர் ரோஜா 220, 240 ரூபாய்க்கும், சாமந்தி 320,300 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்னைக்கு 400 ரூபாய்க்கு, 100 ரூபாய்க்கு விற்கப்பட்ட அரலி மலர் 200 ரூபாய்க்கும், 50 ரூபாய்க்கு விற்கப்பட்ட கேந்தி 80 ரூபாய்க்கும், 40-க்கு விற்கப்பட்ட கோழிக்கொண்டை 60 ரூபாய்க்கு, சென்ற வாரம் 300 ரூபாய்க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் 1000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
அதுமட்டுமல்லாமல் முதல் வெள்ளிக்கிழமையிலேயே பூக்களின் விலை அதிகரித்து இருப்பதாகவும் இன்னும் வருகிற கிழமைகளில் பூக்களின் விலை கண்டிப்பாக உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் விலை அதிகரித்து இருந்தாலும் பூக்களின் தேவை இருப்பதால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பூக்களை வாங்கி செல்வதாகவும் வியாபாரம் சிறந்த முறையில் நடக்கிறது என பூ வியாபாரி பாலாஜி தெரிவித்தார்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற
கிளிக் செய்க
.
&w=750&resize=750,375&ssl=1)
