• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

ஆடம்பர காரில் வந்து பிச்சை எடுக்கும் மலேசியர்: தினமும் 45 ஆயிரம் ரூபா உழைக்கிறார்

GenevaTimes by GenevaTimes
February 29, 2024
in மலேசியா
Reading Time: 1 min read
0
ஆடம்பர காரில் வந்து பிச்சை எடுக்கும் மலேசியர்: தினமும் 45 ஆயிரம் ரூபா உழைக்கிறார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சில மணி நேரம் பிச்சை எடுப்பதன் மூலம் நாள் ஒன்றுக்கு 500 ரிங்கிட் ($140) இலங்கை ரூபாயின் மதிப்பில் 45000 ரூபா உழைப்பதாக மலேசியாவின் ஆண் ஒருவர் தெரிவித்து உள்ளார்.

அவரிடம் எஸ்யுவி ஆடம்பர கார் ஒன்றும் உள்ளது. பாகாங் மாநிலத்தின் மாரான் மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் ஸ்ரீஜெயா இரவுச் சந்தையில் பிச்சை எடுப்பதை ஒழிக்கும் நடவடிக்கையாக சோதனையில் ஈடுபட்டபோது இந்த உண்மை அம்பலமானது.

சோதனையின்போது சாம்பல்நிற ஆடையும் குல்லாவும் அணிந்த நிலையில் இவர் பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தார். காகிதப் பை ஒன்றை வைத்திருந்த அவர், அவ்வழியாகச் செல்வோர் இரக்கப்படும் அளவுக்கு நடந்துகொண்டார்.

அதிகாரிகள் இவரை விசாரித்தபோது, அவர் எந்தப் பதிலையும் தரவில்லை. அவர் ஊமை மற்றும் செவிடாக இருக்கலாம் என்று அதிகாரிகள் கணித்தனர்.

ஆனால், அடையாளப் பத்திரங்களை அதிகாரிகள் கேட்டபோது திடீரென்று அவர் பேசினார். பத்திரங்கள் தமது காரில் இருப்பதாக அவர் கூறினார்.

அது எஸ்யுவி ரகத்தைச் சேர்ந்த புரோட்டான் எக்ஸ் 70 ஆடம்பர கார் என்பதும் அப்போது தெரிய வந்தது. அந்த காரின் தற்போதைய விலை மலேசிய நாணயத்தில் 123,800 ரிங்கிட் முதல் 128,800 ரிங்கிட் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டது.

பெயர் எதனையும் தெரிவிக்காத அந்த நபர் இரவுச் சந்தையில் நான்கு அல்லது ஐந்து மணி நேரம் பிச்சை எடுத்து தினமும் 500 ரிங்கிட் வரை பெறுவதாகக் கூறினார்.

கிளந்தான் மாநிலத்தைச் சேர்ந்த அவர் உடற்குறை காரணமாக கடந்த 2001ஆம் ஆண்டு முதல் சமூகநலத் துறையிடம் இருந்து மாதாமாதம் 450 ரிங்கிட் நிதி உதவியும் பெற்று வருகிறார். பிச்சை எடுக்க வேண்டாம் என வாய்மொழி எச்சரிக்கை விடுத்த அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.

Read More

Previous Post

சிங்கப்பூர் வழக்கறிஞரும் -செயல்பாட்டாளருமான ரவி தன் மீதான குற்றச்சாட்டுகளால் ஏமாற்றமடைந்தார் | Makkal Osai

Next Post

அன்வாருக்கு ஆதரவு வழங்குவதை தடுக்கும் பட்சத்தில் என் MP பதவியை நான் ராஜினாமா செய்யத் தயார்: சுஹைலி அப்துல் ரஹ்மான் | Makkal Osai

Next Post
அன்வாருக்கு ஆதரவு வழங்குவதை தடுக்கும் பட்சத்தில் என் MP பதவியை நான் ராஜினாமா செய்யத் தயார்: சுஹைலி அப்துல் ரஹ்மான் | Makkal Osai

அன்வாருக்கு ஆதரவு வழங்குவதை தடுக்கும் பட்சத்தில் என் MP பதவியை நான் ராஜினாமா செய்யத் தயார்: சுஹைலி அப்துல் ரஹ்மான் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin