போரில்லாத அமைதியான உலகிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த போப் பிரான்சிஸ், உலகில் அடிமை முறையை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். அதேசமயம், பெண்களின் சில குறிப்பிட்ட உரிமைகள் தொடர்பான பிரச்னையில் அடிப்படைவாத கொள்கை கொண்டவராக போப் பிரான்சிஸ் விமர்சிக்கப்பட்டார். திருமண முறிவு, கருக்கலைப்பு, கருத்தடைக்கான உரிமை உள்ளிட்டவற்றில் பெண்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அவர் எடுத்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டார். கருணைக் கொலை செய்வதைக் கடுமையாக எதிர்த்த போப் பிரான்சிஸ், திருநங்கை, திருநம்பி, ஓரின சேர்க்கையாளர்கள் உள்ளடக்கிய எல்ஜிபிஇடி அமைப்பின் செயல்பாடுகளை கடுமையாக எதிர்த்தார். அதே சமயம், அவர்களை கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதிலும் அவர் உறுதியாக இருந்தார்.


