முன்னதாக, சோடியம் மெட்டல் எனும் வேதியல் பொருளை தண்ணீரில் நனைத்தால் வெடிக்கும் என்பதை யூ டியூப் மூலம் தெரிந்துக்கொண்ட அந்த மாணவர்கள், அதில் ஒருவரது உறவினரின் அடையாளத்தைப் பயன்படுத்தி அதனை இணையத்தின் வாயிலாக வாங்கியுள்ளனர்.
பின்னர், அதை அவர்களது பள்ளிக்கூட கழிப்பறையினுள் ஆசிரியரைக் குறிவைத்து பொருத்தியுள்ளனர். எதிர்பாராத விதமாக அந்த கழிப்பறையை பயன்படுத்திய 4ஆம் வகுப்பு சிறுமி பிளஷை அழுத்தி அதனுள் தண்ணீர் செலுத்தியபோது அது வெடித்து படுகாயமடைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், குற்றவாளிகளான 5 மாணவர்களில் 4 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ள நிலையில், 5வது மாணவர் வெளி ஊருக்கு சென்றிருப்பதினால் அவரது வருகைக்காகக் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

