Last Updated:
இந்த தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த 9 வீரர்கள் இந்தியா சார்பாக பங்கேற்றுள்ளனர்.
ஆசிய தடகளப் போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றுள்ள தமிழக வீரர்கள் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை தேடித் தந்துள்ளனர்.
ஆசிய தடகளப் போட்டிகள் தென்கொரியாவின் குமி நகரில் இன்று தொடங்கியது. இந்த தொடரில் தமிழ்நாட்டை சேர்ந்த 9 வீரர்கள் இந்தியா சார்பாக பங்கேற்றுள்ளனர்.
இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணியளவில் இருந்து போட்டிகள் இந்தியாவுக்கு ஆரம்பித்தன. 20 கி.மீ. ரேஸ் வாக் ஆடவர் இறுதிப் போட்டி, அதைத் தொடர்ந்து உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் தொடரின் மும்முறைதாண்டுதல் போட்டியில் தமிழ்நாடு வீரர் பிரவீன் சித்திரவேல் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 16.90மீட்டர் தாண்டி 2வது இடம் பிடித்து வெள்ளி வென்றார் பிரவீன் சித்திரவேல்.
400மீ தொடர் ஓட்டம் கலப்பு பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது. இந்திய அணியில் இடம்பிடித்த நான்கு வீரர்களில் சந்தோஷ், விஷால், சுபா வெங்கடேசன் ஆகிய மூன்று பேர் தமிழர்கள் ஆவர்.
தமிழ்நாட்டை சேர்ந்த 9 வீரர்கள் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ளனர்.ட்ரிபிள் ஜம்ப் பிரிவில் பிரவீன் சித்ரவேல், 20 கிலோமீட்டர் நடை போட்டியில் செர்வின், 4•100 ரிலே போட்டியில் தமிழரசு, ராகுல் குமார் ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
இந்த ரிலே போட்டியுடன் சேர்த்து கலப்பு ரிலே போட்டியில் விஷால், சந்தோஷ் குமார் ஆகியோர் களம் கண்டுள்ளனர். இதில்தான் இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.
400 மீட்டர் மற்றும் 400 மீட்டர் தடை தாண்டி ஓட்டம் பிரிவில் வித்யா ராம் ராஜ் பங்கேற்கின்றனர். 4•100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அபிநயாவும், 4*400 மீட்டர் தொடர் ஓட்டம் மற்றும் கலப்பு தொடர் ஓட்டத்தில் சுபாவும் கலந்து கொள்கிறார்கள்.
வரும் 31 ஆம் தேதி சனிக்கிழமை வரையில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகின்றன. முதல் நாளிலேயே தமிழக வீரர்கள் பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்க்ள.


