Last Updated:
சாய் சுதர்சன் கடந்த ஐபிஎல் தொடரில் 759 ரன்கள் குவித்தார். அவர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால் ஏற்கனவே இந்திய அணியின் டாப் ஆர்டரில் பல பேட்டர்கள் உள்ளார்கள்
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் 5 முக்கிய வீரர்கள் அணியில் இடம் பெற உள்ள வாய்ப்புகள் குறைவு என்று கூறப்படுகிறது. இது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடுத்த மாதம் 9-ஆம் தேதி தொடங்க உள்ளது. மொத்தம் 8 அணிகள் இந்த தொடரில் பங்கேற்கின்றன.
டி20 வடிவத்தில் ஆசிய கோப்பை தொடர் நடத்தப்பட உள்ளது. 8 அணிகளும் ஏ மற்றும் பி என 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ அணியில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய நாடுகளும், பி பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய நாடுகளும் இடம்பெற்றுள்ளன.
அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், ஐபிஎல் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய 5 வீரர்களுக்கு அணியில் இடம் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல் அணிக்காக கே.எல். ராகுல் 13 போட்டிகளில் 539 ரன்கள் குவித்தார். அவர் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்புகள் குறைவு.
ஏனென்றால், விக்கெட் கீப்பருக்கான இடங்களில் சஞ்சு சாம்சன் மற்றும் துருவ் ஜூரல் உள்ளிட்ட வீரர்கள் இருக்கிறார்கள். ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 14 போட்டிகளில் 559 ரன்கள் குவித்துள்ளார். அவர் துலீப் ட்ராஃபியில் மேற்கு மண்டலத்திற்காக விளையாடுகிறார். ஆசிய கோப்பை இறுதிப்போட்டிக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. அதனால், அவர் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது.
பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த சீசனில் 650 ரன்கள் குவித்து இருந்தார். அவர் நான்காவது பேட்ஸ்மேன் ஆக விளையாடும் நிலையில், அந்த இடத்திற்கு சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் உள்ளதால் ஸ்ரேயாஸ் இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.
இதேபோன்று, சாய் சுதர்சன் கடந்த ஐபிஎல் தொடரில் 759 ரன்கள் குவித்தார். அவர் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் என்பதால் ஏற்கனவே இந்திய அணியின் டாப் ஆர்டரில் பல பேட்டர்கள் உள்ளார்கள். எனவே, அவர் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும்.
மேலும், ஜஸ்பிரித் பும்ரா வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பயன்படுத்தப்படலாம் என்பதால் அவருக்கு ஆசிய கோப்பை தொடரிலிருந்து ஓய்வு அளிக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது.
August 17, 2025 8:26 PM IST


