Last Updated:
இந்த திருமண நிகழ்ச்சியில் ஹர்பஜன் சிங், பார்த்திவ் படேல் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், கவுதம் கம்பீர் மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்துக் கொண்டனர். இது தொடர்பான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்று வருகிறது.
குஜராத் மாநில அமைச்சர் ஹர்ஷ் சங்வியின் உறவினரின் திருமண விழா டெல்லியில் நடைபெற்றது. இதில் தான் கௌதம் கம்பீரும், எம்.எஸ். தோனியும் கலந்து கொண்டனர். மேலும், இந்த திருமண விழாவில் பாலிவுட் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் பங்கேற்றனர். ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், அது குறித்தும் இருவரும் பேசிக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த திருமண விழா நிகழ்ச்சியில் எம்.எஸ். தோனி தனது மனைவி சாக்ஷியுடன் கலந்து கொண்டார். தோனி வெள்ளை நிற சட்டை மற்றும் கருப்பு நிற பிளேசரில் அழகாக காட்சியளித்தார். கௌதம் கம்பீர் நீல நிற சட்டையுடன் வந்திருந்த அனைவரையும் கவர்ந்தார். இந்த திருமண நிகழ்ச்சியில் ரோகித் சர்மாவும் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஆனால், அவர் தோனி அல்லது கௌதம் கம்பீருடன் சேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் கூட வெளிவரவில்லை. தோனியும், கம்பீரும் அடிக்கடி பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது கிடையாது. இந்நிலையில், இருவரும் திருமண நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்ட புகைப்படம் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இந்த திருமண நிகழ்ச்சியில் ஹர்பஜன் சிங், பார்த்திவ் படேல் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தோனியும், கௌதம் கம்பீரும் இணைந்து மறக்க முடியாத ஒரு தருணத்தை கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்கள்.
2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை இந்திய அணி வென்றது. அந்தப் போட்டியில் கௌதம் கம்பீர் 97 ரன்கள் குவித்தார். அந்த மேட்சில் தோனி 91 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இந்த மேட்சில் வெற்றி பெற்றது குறித்து தோனி மட்டுமே அதிகம் பாராட்டுகளை பெற்று வந்தார். இந்த போட்டியில் வெற்றி பெற்றது ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சியே காரணம் என கௌதம் கம்பீர் பல தருணங்களில் கூறியுள்ளார்.
August 17, 2025 2:51 PM IST


