[ad_1]
Last Updated:
தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 16 பந்துகளில் 3 சிக்சர் 2 பவுண்டரியுடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு விளையாடுகின்றன.
ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் ஆகிய அணிகளும், பி பிரிவில் இலங்கை, ஆப்கானிஸ்தான், ஹாங்காங் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. இன்று நடைபெற்று வரும் ஏ பிரிவு போட்டியில் இந்திய அணி ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்கொண்டு விளையாடி வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களம் இறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணியின் பேட்ஸ் மேன்களில் தொடக்க வீரர் அலிசான் ஷராபு 22 ரன்களும், கேப்டன் முகமது வசீம் 19 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வெளியேறினர்.
13.1 ஓவர்களில் 57 ரன்கள் எடுத்த ஐக்கிய அரபு அமீரக அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதையடுத்து 58 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்கை நோக்கி இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர்.
September 10, 2025 10:07 PM IST